தெரித்ததென் கொண்டெனை உருத்திரபசுபதிஅவத்தைக்குச் சுத்தத்துவங்கள் கொண்டறிந்தேனாகில், சங்கார கர்த்தாவாகிய பசுபதியே, என்னை யான் அறியுமிடத்து யாது கொண்டறிந்தேன்; செடியனேனையும் அடிமை செய்யப் படிவங் கொண்டு முடிவு காட்டில்லாப் பெண்ணையாளும் வெண்ணெய் மெய்ய அஞ்ஞானியாகிய என்னையும் அடிமை கொள்ள வேண்டி யாவருங்காணத் திருமேனி கொண்டருளி எல்லையிறந்த பல்லேருழவு பயில்தல் விளங்கிய திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவனே; அவத்தையில் தெரித்தனனாயின் அவத்தை தெரித்தாங்கு இரித்தலுமிலனே அவத்தையைப் போல அறிந்தேனாயின் எல்லாம் நீங்கியவிடத்தும் அவத்தை காண்டலும் இருத்தலு முண்டாகாது; திருத்துங் காலம் முதலிய கருவியாயின் மாலும் பிரமனும் வந்தெனை யடையார் அறிவிக்கப்படுங் காலத்தத்துவங்களைக் கொண்டறிந்தேன் என்னில் பிரம விட்டுணுக்களும் எனக்கொவ்வாதாம்; ஓதுங்காலை யொன்றையொன் றுணரா அதுவுமன்றியும் அந்தக் கலாதிகளும் அந்தக்கரணங்களுஞ் சொல்லுமிடத்து ஒன்றையொன்று உணராது; சேதனமன்றவை பேதைச் செயலுமிச் சேதனவானாற் செயல்கொள வேண்டும் அதுவுமன்றி அவை அறிவுடையவு மல்லவாய்ச் சடமுமாய் ஆன்மாக் கூடியல்லது செயற்படாது ஆதலாற் கருவி கொண்டறிந்தவல்லவாம்; போதமவற்றைப் புணர்வதை யறியேன் இப்படிக் கூடியறியச் செய்தே நாமல்லோ கூடியறிகிறோமென்று நானறியேனே; கருவித்திரளினுங் காண்பதோ ரொன்றாம் அவை தன்னை யறியுமிடத்து ஓரொரு கருவியாகவல்லது அறியமாட்டேன்; ஒருவுதலறியேன் உணர்விலனாதலின் அக்கருவிதான் கூடுதலும் நீங்குதலு மறியேன் அறிவிலேன் ஆதலாலே; நிற்கொடு கண்டனனாயின் எற்குக் கருவியாயினை பெருமையுமிலவே நின்னைக் கொண்டு கண்டேனாயின் எனக்கு நீ யறிதற்குக் கருவியாயினாய், நின் பெருமையுமிலையாம்; யானே பிரமம் கோனே வேண்டாம் உன்னை நான் கருவியாகக் கொண்டறிவேனாயின் நானே தலைவனாம், நீ தலைவனாக வேண்டுவதில்லை; இன்னுங்கேண்மோ மன்ன இவையுமன்றி யின்னமுங் கேட்பாயாகத் தலைவனே; நின்னின் முன்னம் என்றன் உணர்விலனாதலின் என்னைக் காண்பினுங் காண்பல என்னை யறியுமிடத்து உன்னை உதவியாகக் கொண்டு காணுமுறைமை யில்லாதபடியாலே கண்டதில்லை; காணாது என்னையானறிவேனாகில் நானென்றும் அறிவென்றும் இரண்டாம்; உன்னைக் காண்பினுங் காண்பல கருவிகளைக் கொண்டு உன்னைக் காண்பினுங் கண்டதல்லவாம்; உன்னோடு ஒருங்கு காண்பினுங் காண்பல அவை யிரண்டுமின்றி உன்னைக் கொண்டு எல்லாவற்றையுங் காண்பினுங் கண்டதல்ல; அருந்துணை கண்டவாறு எது எனது கண்ணே அண்டவாண அருட்பெருங்கடலே உன்னைத் துணையாகக் கொண்டறிவேனாகவேண்டும், அஃதல்லவாயின் என்னை யானறிந்தபடி எப்படி, தேவர்கள் தேவனே யாவரும் பருகுங் கருணைக்கடலே அருளே யென்றவாறு.
இச்செய்யுள், ஆன்மாத் தன்னையறியுமிடத்துக் கருவி யேதென வினாவ, அதற்குத்தரம்: ‘கண்ணாடி தானிடமாக் கண்ணதனைக் கண்டதுபோல் உண்ணா டொளியுன் னொளி.’