மதிநுதல் பாகனாகிக் கதிதர வெண்ணெய்த் தோன்றி நண்ணியுள் புகுந்து என்னுளம் வெளிசெய்து உன் அளவில் காட்சி காட்டி எற் காட்டினை மதிபோலும் நுதலினையுடையாளைப் பாகத்திலுள்ள நீ எனக்கு முத்திதரவேண்டித் திருவெண்ணெய் நல்லூரிலே தோன்றி என்னை யாண்டருள்வதாய் உள்புகுந்து என்னுள்ளத்தை வெளியாக்கி எனக்கு உனதெல்லையற்ற காட்சியைத் தெரிசிப்பித்து எண்னுண்மையைக் காட்டினா யாயின்; எனினும் நாட்டி என் உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல் பாதாளசத்தி பரியந்தமாக ஓதியுணர்ந்த நானே அப்படி யாயினீராயின், எனது தலைவனே, என் முற்பட்ட சிறுமையும் இப்பொழுதுண்டான பெருமையும் எனக்கே சொல்லில் பாதாளசத்தி முதலாகத் தலைவன் தன்மையீறாக நானே ஓதியறிந்ததுண்டாதலால்; ஏக முழுத்தும் நின்றனனே முதல்வ அறிவோடு கூடினபொழுது அறிவுதானாக நிறைந்து நின்றேனாயில், தலைவனே; முழுத்தும் புலன்கடைப் பூழை நுழைந்தனன் என்குணமான புலன்களினுழை வழியிலே எப்பொழுதும் நுழைந்து திரிவேனாம்; கலங்கி ஆங்கு ஐந்தவத்தையும் அடைந்தனன் இவ்வளவும் அறியு மாத்திரத்தானுங் கலங்கிப் பஞ்சவத்தைப்பட்டு நிற்பேன்; நீங்கிப் போக்குவரவு புரிந்தனன் அதுவுமின்றி யிவ்வுடல் நீங்கில் வானிலும் நிரையங்களினும் போக்குவரத்துஞ் செய்து திரிவேன் ; தூக்கி இவையிற்றை ஆராயுங்காலத்து ; எவ்விடத்துண்மையும் இவ்விடத்தாதலுஞ் செல்லிடத் தெய்தலுந் தெரித்து மூன்றினும் ஒன்றெனக்கு அருளல் வேண்டும் யான் முன் எல்லாவற்றையு மோதியுணர்ந்த எல்லாவிடத்தும் நீங்கினவிடத்துந் தன்னுண்மையும். செல்லப்பட்ட பரத்தொடு கூடிநிற்றலும் ஆகிய மூன்றையும் விசாரித்து இதனிலே யொன்றை உண்மையாக எனக்கருளல்வேண்டும்; என்றும் இல்லது இலதாய் உள்ளது உளதெனுஞ் சொல்லே சொல்லாய்ச் சொல்லுங்காலை உலகத்து உள்ளதுளதாய் இல்லதில்லையா மென்னுஞ் சொல் தவறாது கொள்ளுமளவில்; சிறுத்தலும் பெருத்தலுமிலவே நிறுத்தி ஒருகாற் சிறுத்தும் ஒருகாற் பெருத்துஞ் செய்யாது ஒரு பொருள் நிறுத்தி; யானை எறும்பினானது போலெனின் ஞானமின்றிவை காயவாழ்க்கை யானையும் எறும்பும் போலப் பெருத்துஞ் சிறுத்து மிருக்குமெனின் உடற்பெருமையுஞ் சிறுமையுமொழிந்து ஞானமல்ல அச்சொல்லை விடுக; மற்றவையடைந்தன வுளவெனின் அவ்விடத்தில் அவ்வுடலடைந்த ஆன்மாவு மவ்வுடலளவுஞ் சிறுத்தும் பெருத்துமுளதே யென்கின்றீராயின்; அற்றன்று சொல்லுகிற முறைமைபோலல்லர் காணும்; விட்ட குறையின் அறிந்து தொன்றுதொட்டு வந்தனவெனவேண்டும் எடுத்த உடலுக்கடுத்த வறிவாதலால் தான் பொசித்து விட்ட குறையை யறிந்து உடல் பெருமை சிறுமை தொந்தித்து வந்தனவாக வேண்டும்; நட்ட பெரியதிற் பெருமையுஞ் சிறியதிற் சிறுமையும் உரியது நினக்கே உண்மை பொருத்தப்பட்ட பெரியதற்குப் பெருமையாயுஞ் சிறியதற்குச் சிறுமையாயு மிருத்தலும் உனக்குள்ளதாமுண்மையாம்; பெரியோய் எனக் கின்றாகும் என்றும் மனக்கினியாய் இனி மற்றது மொழியே தம்பிரானே, எனக்குக் குணமில்லையாமாதலால் மனதுக்கு என்றும் இனிமை தங்கி யொருதன்மையாக உள்ளவனே இந்த முறையை யருளென்றவாறு.
இச்செய்யுள்; ஆன்மாக் கூடினது தானாவனாதலால் அருளொடு கூடினபோது அருளாய் நிற்பவன் என்றதனை வினாயது; அதற்குத்தரம்; இருளொடு கூடி இருளாய் விழித்த விழி ஒளியொடு கூடினபோது ஒளிதானாய் நின்றது கண்டாற்போல, ஆன்மாவும் எப்போதுங் கூடினதுதானாய் நிற்பன், அருளிலும் மலத்திலும் அப்படியே, அருளொடு கூடினவற்கு அருளும் மலத்தொடு கூடினவற்கு மலமும் இல்லையென்பது கருத்து.