அறிவு அறியாமை யிரண்டும் அடியேன் செறிதலால் மெய்கண்ட தேவே அறிவோ வறியேனோ யாதென்று கூறுகேன் ஆய்ந்து குறிமாறு கொள்ளாமற் கூறுதேவனே கண்போல இருளிலே கூடினபோது இருளாய் அறிவற்று ஒளியோடு கூடினபோது ஒளியாய் அறிவுண்டாயுஞ் செய்யுங் கண்போலவென்றீர், மெய்கண்டதேவனே, அறிவும் அறியாமையும் அடியேன் கூடியறிதலால் இந்த அறிவாகிய சிவமோ யான் அறியாமையாகிய பாசமோவென்ன எனதுண்மையை மாறுபடாமல் இந்த வழியை ஆராய்ந்தருளென்றவாறு.
இச்செய்யுள், அறிவோடு கூடினபோது அறிவாயும் அறியாமையோடே கூடினபோது அறியாமலுமாகில் ஆன்மாவின் உண்மையாதென்றதற்கு உத்தரம்; ஆன்மா அறிவிக்க அறியும், அறிவு கூடி அதுதானாயிருக்கும்; இதற்குச் சதசத்தென்றும் பெயராம்.