மானமருஞ் செங்கை மதில் வெண்ணெய் வாழ் மன்ன போனவினை தானே பொருந்துமோ யான் அதனில் ஆவனோ ஆக்காய் அமலனாம் நின்னருள்தான் தேவனே யாதுக்கோ தேர் மானை யேந்துற சிவந்த கரத்தையுடையவனே, மதில்சூழுந் திருவெண்ணெய்நல்லூரில் வாழுந் தலைவனே, யான் புசித்துத் தொலைந்த வினை மீண்டு பொருந்தியதோ, யான்சென்று அதனைக் கூடினேனோ, தேவரீரும் விகாரியாய்க் கூடுதலில்லையே, ஆதலால் (நின்மலராகிய உம்முடைய) அருள் யாது செய்வதாக நின்றது சுவாமியே விசாரித்தருளென்றவாறு.
எனவே வினை பொசிக்குமளவும் யானெனது விஞ்சுதலுண்டாய தெனவறிக.