இறந்தோய் கரணங்களெல்லாம் எனக்குச் சிறந்தோய் எனினும் மெய்த்தேவே பிறந்துடனாங் காயங்கொளவுங் கொளாமலுங் கண்டது நீ ஆயன் கொல் பாதவத்தற்று கருவி கரணங்களெல்லாங் கழன்று நின்ற நீ என்னிடத்து விட்டுநீங்காத சிறப்புண்டாயிருந்தாயாமாகிலும் மெய்கண்டதேவனே அடியேனொரு சரீரத்தை யெடுத்து அந்த உடம்பு தானாக நிற்கவும் அதிற் கூடாமலை (=கூடாமையை) நீ யுண்டாக்கின முறைமை எத்தன்மைத் தென்னின் இடையன் குறைத்த மரத்துக்கொக்கு மென்றவாறு.
இச்செய்யுள், மீளத்தோற்றிய பிரபஞ்சம் பேய்த்தேர்போலப் பொய்யாயிருந்ததெனக் கண்டு கூறியது.