மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை அந்நியமாக்கி அருள்வழியதனான் என்னுள் புகுந்தனையெனினே தலைவனே நீ கன்மந் துலையொத்தபோது நீதானே மலத்தை நீக்கி என்னையுந் தெரிசிப்பித்து எனக்குள்ளுமாய் நின்றாயாதலால்; முன்னைத் திரிமலந் தீர்த்த தேசிக நின்னோடு ஒருவுதலின்றி உடந்தையேயாகும் பெருநிலையாகல் வேண்டும் இப்பொழுது மலங்களை நீக்கிய பரமகுருவே உன்னைவிட்டு நீங்குதலின்றி ஒன்றுபட்டு மிகுந்த நிலையாகல் வேண்டும்; மருவிடு மும்மலமதனால் எம்முள் நின்றிலையெனின் அனாதியே ஆணவம் மாயை கன்மமெனு மலங்கள் என்னைக்கூடி நிற்கையால் எனக்குள்ளே நின்றா யில்லையாயின்; அம்மலத்திரிவுஞ் செம்மலர்த் தாள்நிழல் சேர்தலுமிலவாய்ச் சார்பவை பற்றிப் பெயர்விலனாகும் அந்தமலங்கள் ஒரு காலத்திலும் விட்டு நீங்குதலில்லையாய்ச் செந்தாமரைப் பூவையொத்த திருவடி நிழலிலே கூடுதலுமில்லையாய்ச் சேர்ந்த மலத்தின் செய்தியைப் பற்றி நீங்குதலின்றி நிற்கவேண்டும்; பெரும தீர்வின்று அமைந்த கருமத்தியைந்ததை யல்லது சமைந்தனவிலவெனச் சாற்றில் தலைவனே உடலுக்கமைத்த பிராரத்த கன்மமாகிய புண்ய பாவம் பொசித்துத் துலையொக்குமளவில் மலம் பொருந்தி நிற்கும், புண்ணிய பாவங்கள் துலை யொவ்வாத அவதரத்தும் மலம் விட்டு நீங்காதென்னின்; அமைந்த மாயேயங்கன்ம மாமலம் மூன்றும் மாயாதாகவே ஆர்ச்சனமாயையின் உற்பவந் தீரா வொழுகுமொன் றொன்று அந்தக் கன்ம மாயை முதலியவாகிய அறத்துவாவிலும் நிறைந்து நிற்றலால் மலமூன்றுங் கெடாமல் நின்றே புண்ணிய பாவங்களை ஆர்ச்சிக்கவேண்டுமாதலால் 1(மாயையின் தோற்றமாயுள்ள சரீர தொந்தனை ஒன்றுக்கொன்று விடாமல் மேன்மேலும் தொன்றுதொட்டு வரும்); நிற்சமம் உன்னைப்போல் அந்த மலங்களும் அனாதியாம்; ஆயின் நிற்பெறல் இல்லென மொழிந்த தொல்லறந் தனக்கு மேயாதாகும் அப்படியாகையால் உனக்கொப்பொன்றில்லையென்ற பழைய நூலுக்கு இத்தன்மை பொருந்தாததனால்; நாயேனுளத்து நின்றனை யென்பனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றா யென்பேனோ;நின்றிலை யென்பேனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றாயில்லை யென்பேனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றா யென்பேனோ; நின்றிலை யென்பேனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றாயில்லை யென்பேனோ; பொன்றிய பொன்றிற்றில மலமென்பனோ - மலமானது கெட்டதென்பதுவோ நின்றதென்பதுவோ யாதுசொல்வேன்; ஒன்றினை யுரைத்தருள் மன்ற - இவற்றினொன்றை யெனக்குத் தெரிய நிச்சயமாக அருள்வாயாக; குன்றாப் பெண்ணைப் புனல்வயல் வெண்ணெய்க் கதிபதி கை கண் தலை வாய் கால் செவி மூக்கு உயர் மெய்கொண்டு என்வினை வேரறப்பறித்த மெய்கண்டதேவ வினையிலி மைகொண்ட கண்ட வழுவில் என் மதியே கேடுபடாத பெண்ணையாற்றுப் புனல் சூழப்பட்ட வயலையுடைத்தாகிய திருவெண்ணெய் நல்லூருக்கு நாயகமே கையுங் கண்ணுந் தலையும் வாயுங் காலுஞ்செவியும் மூக்குமென்னும் அவயவங்களை யுடையதொரு திருமேனியைக் கொண்டு எனது வினையை வேரறப் பறித்த (மெய்க்கண்ட தேவனே கன்ம தொந்தனையில்லாதவனே) நீலகண்டனே பழுதில்லாத என்னறிவாயுள்ளவனே அருள்வாயாக என்றவாறு.
இச்செய்யுள் மலம் அனாதியென்னு முறைமையும் முக்தியைப் பெற்ற ஆன்மாக்களிடத்து மலமில்லையென்னு முறைமையும் அறிவித்தது.