3. இருபா விருபது
001 இருபா இருபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
பாடல் எண் : 1

கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி
மண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் - வெண்ணெய்நல்லூர்
மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

நெற்றியில் திருநயனமும் நீலகண்டமும் முதலியவற்றை மறைத்துத் தரையிடத்து அருள மாந்தரை யிருள்நீக்கும்படி மானிட யாக்கையால் வந்தவன் திருவெண்ணெய்நல்லூரிலே வாழும் மெய் கண்ட தேவனாதலால் அவனை ஒருகாற் சென்று பொருந்துவராயின் அருள்வேற்றுமையின்றி நிற்குமுறைமையை அவரே கரதலாமலகம் போற் கண்டா ரென்றவாறு.

குறிப்புரை :

உள்ளத்துக்கண் என்றது உள்ளத்தைக் கண்போலவும் சிவனை ஆதித்தன் போலவும் வேறின்மை கண்டா ரென்றுமாம். இச்செய்யுள் குரு அறிவிற்கு முறைமை கூறிற்று.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Pleased to conceal His eye in His forehead
And the stain in His throat, He came down
To remove the malas of mellowed souls on earth;
He is Meikandaan of Tiruvennainallur.
Whoever ensouls His name will realize in his soul
His non-separateness from Him.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ka'n'nuthalung ka'ndak ka'raiyung kara:ntharu'li
ma'n'nidaiyin maakka'l malamaka'r'rum - ve'n'ney:nalloor
meyka'ndaan en'rorukaal maevuvaraal vae'rinmai
kaika'ndaar u'l'laththuk ka'n.
சிற்பி