எவ்வடிவு... ஆகி சிவஞ் சத்தி நாதம் விந்து சதாசிவன் மயேசுரன் ருத்திரன் விட்டுணு பிரமா மற்றுமுள்ள வடிவுகளெல்லாந் தானே யாகின்ற சிறந்த பரைவடிவே தனக்கு வடிவாகி ; கவ்விய... ஆக்கி மலத்தைப் பிடித்துக் கிடக்கும் ஆன்மாக்களையும் அவ்வான்மாக்கள் ஆர்ச்சித்த வினைகளையும் அறிந்து பொசிப்பிப்பது காரணமாக மாயா காரியமாகிய உடலுந் தத்துவங்களும் புவனங்களும் பொசிக்கும் பதார்த்தங்களுமாக விசாரித்து நிறுத்திப் பொசிப்பித்துத் தொலைப்பிக்கு மளவிலே, வேலை கொள்வானொருவன் வேலை செய்வானொருவ னிளைப்புக்கண்டு நடுவே யிளைப்பாற்றி வேலை கொள்ளும் முறைமை போல, மலத்திடைப்பட்டுக் கிடக்குந் துயரந் தீருமளவும் மாயையின் காரியத்தை யொடுக்கிப் பின்னுமுண்டாக்கி ; பவ்வம்... அன்றே அப்படித்தாகு முறைமையை அடைவிலே தொலைப்பித்து இரட்சிப்பானொரு பரமேசுரன் வடிவு பரையென்றும் அது உயிர்க்குயிராய்த் திருவடி ஞானமாய் நின்று அறிவிப்பதைத் திருவருளையே இடமாக நின்று காணுதல் சிவரூபமாம்.