11. கொடிக்கவி
001 கொடிக்கவி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4
பாடல் எண் : 2

பொருளாம் பொருளேது போதேது கண்ணே(து)
இருளாம் வெளியே திரவே(து) - அருளாளா
நீபுரவா வையமெலாம் நீஅறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பொருளாம் பொருள் ஏது பொருளிலே அழியாத பொருள் ஏது ; போது ஏது கிரணமாகிய சுத்தி ஏது ; கண் ஏது கண்போல ஆன்மா ஏது; இருளாம் வெளி ஏது இரவு ஏது அஞ்ஞானமாகிய சகல கேவலந்தான் ஏது; அருளாளா அருளையுடையவனே ; நீ புரவா வையமெலாம் நீ அறிய வையமாகிய மலமாயாதி கன்மங்களிலே பொருந்தாமல் ஆன்மாக்களினிடமாகப் பொருந்தியிருக்கிற தேவரீர் அறிய ; கோபுர வாசற் கொடி கட்டினேன் கோபுரவாசலிலே கொடி கட்டினேன்.
கர்த்தா ஏது சத்தி ஏது ஆன்மா ஏது கேவலசகலம் ஏது இது சொல்வார் உளரோ என்று கொடி கட்டினோம்.
அழியாத பொருள் ஏதென்னில், அகண்ட பரிபூரணமாய் உயிர்க்குயிராய் ஆனந்த ரூபமாயிருக்கிறது தற்சிவம். அதற்கு உம் : சிவப்பிரகாத்தில் (13) ‘பலகலையா கமவேதம்’ என்ற பாடத்திற் கண்டுகொள்க. கிரணவொப்பாகிய சத்திதான் ஏதென்னில், சத்தியென்பது தனியே ஒரு முதலல்ல, சூரியனுங் கிரணமும் போல மரமும் காழ்ப்புப் போலத் தடையற்ற ஞானமாயிருக்கும். அதற்கு உம் : சிவப்பிரகாசத்தில் (75) ‘சுத்தமாஞ் சத்திஞானச் சுடராகும்’ என்ற பாடத்திற் கண்டுகொள்க. சித்தியாரில் (1.62) ‘சத்திதன் வடிவே தென்னிற் றடையிலா ஞான மாகு’ மென்றும், (1.67) ‘ஒருவனே யிராவ ணாதி’ யென்ற பாடத்தில், ‘வரும்வடி வெல்லாஞ் சத்தி சத்திதான் மரமுங் காழ்ப்பும், இருமையும் போல மன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும்’ என்றும் வருவன கண்டுகொள்க. கண்ணொப்பாகிய ஆன்மா ஏதென்னில், அது அதுவாய் அடுத்ததன் தன்மையாய் வசிப்பைப் பற்றின வியாபகமாய்க் கண்படிகம் ஆகாசம்போல ஒப்பையுடையதாய் அக்கினியைப்போலப் பற்றி நிற்கிற தல்லாமல் தனித்துநிற்கிற முதலல்லவாய் அருவம் உருவம் ரூபாரூபமல்லவாய்ப் பூவிற் கந்தம் போன்றதாயிருப்பது ஆன்மா. இதற்கு உம் : சிவஞான போதத்தில் (4.5) ‘மாயா தனுவிளக்காய் மற்றுள்ள’ மென்ற பாடத்திலும், சிவப்பிரகாசத்தில் (59) ‘ஓரிடத்திருத்த’ லென்ற பாடத்திலும், சித்தியாரில் (4.20) ‘அசித்தரு வியாப கம்போல் வியாபக மருவ மின்றாய், வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி’ என்றும் ; திருவருட் பயனில், (18) ‘இருளி லிருளாகி யெல்லிடத்தி லெல்லாம், பொருள்க ளிலதோ புவி’ யென்றும், சித்தியாரில் (பரபக்கம் 52) ‘அங்கி யானது தானு மொன்றை யணைந்து நின்று நிகழ்ந்திடும், பங்கி யாதுயிர் தானு மிப்படி பற்றி யல்லது நின்றிடாது’ என்றும், சிவஞான போதத்தில் (7.3) ‘தோன்றல் மலர்மணம்போற் றொக்கு’ என்றும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. அஞ்ஞானமாகிய கேவலசகலந்தான் ஏதென்னில் : அதிற் கேவலமாவது தத்துவங்களோடே பொருந்தாமல் போகத்திற் கொள்கை யில்லாதவனாய் அறிவில்லாதவனாய் அந்தகாரத்திலே அலரவிழித்த விழிபோன்றதாய், மலமொன்றுமேயாய் அதுவாய் அந்த மல மாய்கையைவிட்டு நீங்குமுறைமை யில்லாததாயிருப்பது கேவலம். இதற்கு உம் : சிவப்பிரகாசத்தில் (33) ‘ஓங்கிவரும் பலவுயிர்கள்’ என்ற பாடத்திலும், சித்தியாரில் (4.38) ‘அறிவில னமூர்த்த னித்த னரா காதி குணங்க ளோடும்’ என்ற பாடத்திலும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. சகலமாவ தேதென்னில், சகலத்துக்கு வெளியென்றும் தீபமென்றும் பெயர். வெளி தீபமென்றிருக்கிற சகலத்தை அஞ்ஞானமென்று சொல்லுவானேனென்னில்(“சகலத்திலே அஞ்ஞானமாகிய மாயா போகத்தைப் புசிப்பிக்கு மல்லாமல் ஞானத்தினை யுணர்த்தாது; ஞானம் சுத்தத்திலே யல்லாமல் உண்டாகாது; ஆகையால் சகலமும் போகத்தைப் புசிப்பிக்கிற நிமித்தமாகக் கேவலத்திற்கு இது தீபமென்றும் வெளியென்றும் சொன்னதல்லாமல் இதுவும் அஞ்ஞனமே தப்பாது”)சகலம் மாயா போகத்தைப் புசிப்பிக்கத் தீபமாக வந்தது, தனக்கு வேண்டிய தன்னை வினையைத் தலைவனை உணர்த்தாதாகையாலும் அஞ்ஞானமே இயக்குவிக்கு மென்பதினாலும் அறிக.சிவப்பிரகாசத்தில் (37) ‘புகலுமல மொழித்தற்கு’ என்ற பாடத்திலும், இருபாவிருபதில் (206) ‘இருள் வெளியாகு மருளினை யறுத்து’ என்பதிலும் அறிக. அருளாளா கிருபை யுடையவனே. நீ புரவா வையமெலாம் நீ யறியக் கட்டினேன். * சர்வத்ர பரிபூரணனாக இருக்கப் பிரபஞ்சத்திலே பொருந்தாமல் உயிர்களிடமாய் நிறைந்திருக்கிறது எப்படியென்னில், சூரியன் அந்தகாரத்தைப் பொருந்தாமல் எங்கும் வியாபித்து நிற்கிறது போலும் ; உயிரும் சிவமும் கலப்பாக இருக்க ஆன்மாக்களை மலம் பொருந்தினது எப்படியென்னில், சமுத்திரமும் சலமும் உப்பும்போல. உம் : நெஞ்சுவிடுதூதில் (8) ‘படநாகம் பூண்ட பரமன் பசுவி, னிடமாய் நிறைந்த இறைவன்’ என்றும், சித்தியாரில் *(7.1) ‘அனைத்துஞ்சத் தென்னி னொன்றை’ யென்றும், (7.3) ‘சுத்தமெய்ஞ் ஞானமேனிச் சோதிபா’ லென்றும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. கோபுர வாசற் கொடி அந்தக் கர்த்தாவே கர்ண பரம்பரையாக அநுக்கிரகம் பண்ணி யறிகிறதென்பது கருத்து.

குறிப்புரை :

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Under construction.

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
poru'laam poru'laethu poathaethu ka'n'nae(thu)
iru'laam ve'liyae thiravae(thu) - aru'laa'laa
:neepuravaa vaiyamelaam :neea'riyak kaddinaen
koapura vaasa'r kodi.
சிற்பி