பதிக வரலாறு இல்லை
அழகிய தில்லை நகரம் எம்மை இரக்ஷிக்க. சிவபோகம் எம்மை இரக்ஷிக்க ; அவனருளிச் செய்த மெய்ஞ்ஞானப் புண்ணிய நூல் எம்மை இரக்ஷிக்க ; எம் கொடிய பாசபந்தங்களுக்கு வேறாகி வந்து உள்ளே யெழுந்தருளியிருந்த சம்பந்தமாமுனியின் அழகிய பாதங்கள் எம்மை இரக்ஷிக்க.
போற்றிப்பஃறொடை யுரை முற்றியது
திருச்சிற்றம்பலம்
(போற்றிப்பஃறொடை யுரை சென்னைச் சிவஞான போத யந்த்ரசாலைப் பதிப்பி லுள்ளபடியே இன்றியமையாத சில திருத்தங்களோடு இங்குப் பதிப்பிக்கப்பட்டது. இதற்குக் கையெழுத்துப் பிரதிகள் அகப்படவில்லை. உரை விளக்கமாகவுள்ளது. உரை செய்தார் பெயர், உரைசெய்த காலம் முதலியன விளங்கவில்லை. இறுதியிலுள்ள வெண்பாவினுரை மெய்கண்ட சாத்திர வுரைப்பதிப்பிலுள்ள உரையைத் தழுவி எழுதப்பட்டது. எஸ். அனவரத விநாயகம் பிள்ளை.)