கரிய நீல மலரைப் போன்ற கழுத்தையுடைய இறைவரின், செம்மை பொருந்திய திருவடி நீழலில் சேர்ந்து இன்புறும் கோச்செங்கட் சோழரின் மலர் போன்ற அடிகளை வாழ்த்தி, இனிய தன்மை பொருந்திய இசையை வழங்கும் யாழினது தலைவராய் உலகம் போற்றும் திருநீல கண்ட யாழ்ப்பாணரின் திறத்தை இனிச் சொல்லத் தொடங்குகின்றேன்.
கோச்செங்கட்சோழ நாயனார் புராணம் முற்றிற்று.