பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
31 தண்டியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
பாடல் எண் : 2

காணுங் கண்ணால் காண்பதுமெய்த்
    தொண்டே யான கருத்துடையார்
பேணும் செல்வத் திருவாரூர்ப்
    பெருமான் அடிகள் திருவடிக்கே
பூணும் அன்பி னால்பரவிப்
    போற்றும் நிலைமை புரிந்தமரர்
சேணு மறிய வரியதிருத்
    தொண்டிற் செறியச் சிறந்துள்ளார்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

காணுகின்ற கண்ணால் காண்டற்குரியது இறைவனது உண்மையான தொண்டே எனும் கருத்து உடையவர்; அவர் பேணு கின்ற பெருஞ் செல்வமாம் தியாகராசப் பெருமானின் திருவடிக்காகப் பூணுகின்ற அன்பினால் போற்றி வணங்கும் நிலைமையில் நின்றவர்; வானவர்கள் தொலை தூரத்திலேனும் இத்தொண்டின் பெருமை இத்தன்மைத்து என அறிதற்கரிய திருத்தொண்டில் மிகவும் பற்றுடைய வராய், அப்பற்றில் சிறப்பு மிக்கவராய் வாழ்வாராயினர்.

குறிப்புரை :

`தொண்டலால் துணையுமில்லை' (தி.4 ப.40 பா.4) என்பர் நாவரசர். அத்திருத்தொண்டே இவர் மேற்கொண்ட அரிய திருத்தொண்டாம்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
His conviction was that the fruit of sight was
For true servitorship; he ever desired to foster love
For the adoration of the hallowed feet of the Lord
Of Tiruvaaroor, the opulence of which is to be worthily
Guarded; he was poised in firm and sacred servitorship
Which the Devas could not comprehend ever distantly.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
kaa'nung ka'n'naal kaa'npathumeyth
tho'ndae yaana karuththudaiyaar
pae'num selvath thiruvaaroorp
perumaan adika'l thiruvadikkae
poo'num anpi naalparavip
poa'r'rum :nilaimai puri:nthamarar
sae'nu ma'riya variyathiruth
tho'ndi'r se'riyach si'ra:nthu'l'laar.
சிற்பி