தேன் நிரம்பிய மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தில்லையுள் ஆனந்தக் கூத்தினை இடையறாது இயற்றி வருகின்ற கூத்தப் பெருமானின் அழகிய திருவடிகளைத் தொழ, தசை பொருந்திய உடம்பினை உடைய மானிடப் பிறவியே, தான் பெறுதற் குரிய உறுதிப் பொருளாய வீடுபேற்றினை அடையும்.
கூத்தப் பெருமானின் தாள் தொழ, மானுடப் பிறவி வீடு பேறடையும் என்பது கருத்து. தில்லையைத் தரிசிக்க முத்தி எனக் கூறு வதும் காண்க. ஊன் - தசை. உறுதி - வீடுபேறு. மாநடம் - ஆனந்தக் கூத்து. உயிர்க்குற்ற மும்மலக் கட்டையும் அறுத்து, அவ்வுயிரைத் தன் அருள்வெள்ளத்தில் அழுத்தி, அதனின்றும் மீளாதவாறு இன்புறச் செய்வது இத்திருக்கூத்தின் இயல்பாம்.