பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
00 திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தய பாடல் மொத்தம் 349 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்
பாடல் எண் : 151

நரசிங்க முனையர் என்னும்
   நாடுவாழ் அரசர் கண்டு
பரவருங் காதல் கூர 
    பயந்தவர் தம்பாற் சென்று
விரவிய நண்பி னாலே
    வேண்டினர் பெற்றுத் தங்கள்
அரசிளங் குமரற் கேற்ப
   அன்பினால் மகன்மை கொண்டார்
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

அந்நாட்டு அரசராய நரசிங்க முனையர் என்பார், அந்நம்பியாரூரரைப் பார்த்துச் சொலற்கரிய ஆசை மிகுதியால், அவர் தந்தையாராகிய சடையனாரிடத்துச் சென்று, அவருக்கும் தமக்கும் இருக்கும் நட்பு மிகுதியால், அந்நம்பியாரூரரை வேண்டிப் பெற்றுக் கொண்டு, தம்மரபில் பிறந்த இளவரசருக்குச் செய்யும் சிறப்புக்களை யெல்லாம் செய்து, அன்போடு தம் மகனாராக வளர்த்து வந்தார்.

குறிப்புரை :

நரசிங்க முனையர்: இம்மரபினர் சிற்றரசர்களாகவும், சோழப் பேரரசின் அமைச்சர்களாகவும் விளங்கியவர்கள். `பலர் முடிமேல் - ஆர்க்குங் கழற் காலனகன் றனதவையுட் பார்க்குமதி மந்திர பாலகரிற் போர்க்குத் தொடுக்குங் கமழ் தும்பை தூசினொடுஞ் சூடிக் கொடுத்த புகழ்முனையர் கோனும்` (விக். உலா வரி, 140-142) என வரும் விக்கிரம சோழனுலாவால் இம் மரபினர் அமைச்சராய் இருந் தமை அறியலாம். இவர் பல்லவ மன்னனாகிய கழற்சிங்கர் காலத்தில் வாழ்ந்த சிற்றரசர் ஆவர். பரவ அரும் - சொல்லுதற்கரிய. பயந்தவர் - பெற்றோர். விரவிய நண்பு - மனம் கலந்த அன்பு. நரசிங்க முனையருக்கும் சடையனாருக்கும் இருந்த நட்புரிமை இதனால் தெரிகிறது. வேண்டினர் பெற்று - நரசிங்கமுனையரின் வேண்டு கோட்கு இணங்கச் சடையனாரால் கொடுக்கப் பெற்று. மகன்மை - மகனாகக் கொள்ளும் உரிமை.
இக்காலத்தில் இதனைச் சுவிகாரம், தத்து எடுத்தல் என்றெல் லாம் கூறுப. இவற்றிற்கு எல்லாம் மேலாகத் தெளிவும், இனிமையும் தோன்ற இச் சொல்லாட்சி அமைந்துள்ளது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Him beheld the king of the realm, Narasingka Munaiyar;
He felt ineffable love for the child;
Fortified by claims of intimacy, he beseeched
And obtained leave to rear the child in royal splendour;
Thus was he brought up as the king’s abhimana putra.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:narasingka munaiyar ennum
:naaduvaazh arasar ka'ndu
paravarung kaathal koora 
paya:nthavar thampaa'r sen'ru
viraviya :na'npi naalae
vae'ndinar pe'r'ruth thangka'l
arasi'lang kumara'r kae'rpa
anpinaal makanmai ko'ndaar
சிற்பி