இவ்வாறு சிவபெருமான் திருவருளினாலே தோன் றிய அவருக்கு, தவத்தின் நிலையில் மேம்பட்டோரும் போற்றத் தக்க நம்பியாரூரர் எனும் பெயரிட்டு, மேதக்க ஐம்படையையும், சதங்கை யையும் முறையே மார்பிலும், காலிலும் அணிவித்து அழகிய இரத்தினச் சுட்டியை நெற்றியில் தாழுமாறு தலையில் சூட்டி, சிவந்த பொன்னாலாய அரை ஞாணை இடுப்பில் விளங்க அணிவித்து, திகழும் அவர், வீதியில் சிறுதேர் உருட்டி விளையாடும் நாள்களில் (ஒருநாள்).
ஐம்படை - திருமாலின் கரங்களில் விளங்கும் ஐந்து படைகளாய சங்கு, உருள் (சக்கரம்), வாள், கதை, கத்தி ஆகிய ஐந்தின் வடிவாகச் செய்யப்பட்ட அணி. இவற்றை மார்பில் கோத்து அணிவது மரபு. சதங்கை - இடையிலும் காலிலும் அணிவது. ஐம்படைச் சதங்கை - உம்மைத் தொகை.