``மூன்று அரணம்`` மூன்றில் முதலது முப்புரம், இடையது (அரணம் -
பாதுகாவல்) மும்மூர்த்திகள்.
இறுதியது (அரணம் - சரீரம்) தூலம், சூக்குமம், காரணம் ஆகிய
சாரங்கள்.
``சோதி`` இரண்டில் முன்னது, பொதுவில் `ஈசுரன்` என்றும், பின்னது, சிறப்பாகச்
`சிவன்` என்றும் பொருள் பயந்தன.
தூல சூக்கும காரண சரீரங்களில் நின்று அறிவைப் பயப்பிக்கும்
ஈசுரனை முறையே `விராட், தைசசன், மகேசுரன்` எனக் குறியிட்டு வழங்குவர் வேதாந்திகள்.
ஈற்றடியில் ஆய் நின்ற - நுணுகி நின்ற.
``சோதி`` என்பனவும் விளி களே.
`நீயே அறம்` என
எழுவாய் வருவித்துரைக்க.
எனவே, `உன்னை வணங்குதலே அறம்` என்றபடி.