``அரன்`` மூன்றில் முதலது `சிவன்` என்னும் அளவாய் நின்றது.
இடையது `அறன்` என்பது எதுகை நோக்கித் திரிந்த பெயர்.
அறன் - அறவடிவினன்; இறுதியது,
அரிப்பவன்.
மூன்று பெயர்களுமே விளி ஏற்று நின்றன.
அயனார் - பிரம தேவர்.
`அவரது
அங்கம்` என்றது, தலை ஓட்டினை, அடி-3ல் `அடையாளம்` என்பது ``அடை`` எனக் குறைந்து
நின்றது.
ஈற்றடியில் உள்ள தொடரை, `அயல் ஆக அடை நாகம்` என மாற்றி, `அதற்கு மேல் உனது
திருமேனியில் அணியப்படும் பொருள் பாம்பு ஆகின்றது.
(`அஃது எதற்கு` என்பது
குறிப்பெச்சம்.
)