முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
073 திருக்கானூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 6 பண் : தக்கேசி

முளிவெள்ளெலும்பு நீறுநூலு மூழ்கு மார்பராய்
எளிவந்தார்போ லையமென்றெ னில்லே புகுந்துள்ளத்
தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேற லார்பூவில்
களிவண்டியாழ்செய் கானூர்மேய வொளிவெண் பிறையாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

தேன் பொருந்திய மலரில் கள்ளுண்டு களித்த வண்டுகள் யாழ்போல ஒலி செய்யும் திருக்கானூரில் மேவிய ஒளி பொருந்திய வெண்பிறையை முடியிற் சூடிய இறைவர், காய்ந்த வெண்மையான எலும்பும் திருநீறும் முப்புரிநூலும் பொருந்திய மார்பினராய் எளிமையாக வந்தவர் போல வந்து, `ஐயம் இடுக` என்று கூறிக் கொண்டே என் இல்லத்தில் புகுந்து உள்ளத் தெளிவையும் நாணத்தையும் கவர்ந்து சென்ற கள்வர் ஆவார்.

குறிப்புரை :

இதுவும்; பிச்சை என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்கு வந்து என்னுடைய தெளிவையும் நாணத்தையுங்கொண்ட கள்வர் இவர் என்கின்றது. முளி - காய்ந்த. எளிவந்தார்போல் - இரங்கத் தக்கவர்போல். உள்ளத் தெளிவும் நாணுங்கொண்ட கள்வர் என்றது தன்னுடைய நிறையும் நாணும் அகன்றன என்பதை விளக்கியது. தேறல் - தேன்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Having a chest on which dried white bones, holy ash and sacred thread remain.
entering into my house saying, give me alms like poor persons.
the thief who stole clarity of my mind and bashfulness.
is Civaṉ who wears a bright and white crescent, and who dwells in Kāṉūr where intoxicated bees hum like the music of yāḻ in the flowers having honey.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
mu'live'l'lelumpu :nee'ru:noolu moozhku maarparaay
e'liva:nthaarpoa laiyamen're nillae puku:nthu'l'lath
the'livu:naa'nung ko'ndaka'lvar thae'ra laarpoovil
ka'liva'ndiyaazhsey kaanoormaeya vo'live'n pi'raiyaarae.
சிற்பி