முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
073 திருக்கானூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 11 பண் : தக்கேசி

கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர் மேயானைப்
பழுதின்ஞான சம்பந்தன்சொற் பத்தும் பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்துநின்
றழுதுநக்கு மன்புசெய்வார் அல்ல லறுப்பாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

பேய்களும் தூங்கும் நள்ளிரவில் நடனம் ஆடும் கானூர்மேவிய இறைவனைக் குற்றமற்ற ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன சொல்மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடித்தொழுது முப்பொழுதும் தோத்திரங்களைச் சொல்லித் துதித்து நின்று அழுதும் சிரித்தும் அன்பு செய்பவர்கள் அல்லலை அறுப்பார்கள்.

குறிப்புரை :

இத்தோத்திரங்களைச் சொல்லித் துதித்து ஆனந்தத் தால் அழுதும் சிரித்தும் நிற்பவர்கள் துன்பம் அறுப்பார் என்கின்றது. கழுது - பேய். பொழுது - முப்பொழுதிலும்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
*******************

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
kazhuthuthunjsung kangkulaadung kaanoor maeyaanaip
pazhuthingnaana sampa:nthanso'r paththum paadiyae
thozhuthupozhuthu thoaththirangka'l sollith thuthiththu:nin
'razhuthu:nakku manpuseyvaar alla la'ruppaarae.
சிற்பி