எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
18 வரைபொருட்பிரிதல்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33


பதிக வரலாறு :

முலைவிலை கூறல் வரைவுடம் படுத்தல்
வரைபொருட் கேகலை யுரையவட் கென்ற
னீகூ றென்றல் சொல்லா தேகல்
பிரிந்தமை கூற னெஞ்சொடு கூற
னெஞ்சொடு வருந்தல் வருத்தங்கண் டுரைத்தல்
வற்புறுத் தல்லொடு வன்புறை யழிதல்
வாய்மை கூறன் மன்னவன் மெய்யுரை
தேறாது புலம்பல் காலமறைத் துரைத்த
றூதுவர வுரைத்த றூதுகண் டழுங்கன்
மெலிவு கண்டு செவிலி யுரைத்தல்
மேவிய செவிலி கட்டுவைப் பித்தல்
கலக்குற்று நிற்றல் கட்டுவித்தி கூறல்
வேலனை யழைத்த லின்ன லெய்தல்
விலக்க நினைத்த னிலைமை யுரைத்த
லறத்தொடு நிற்ற லையந் தீர்த்த
லவன்வெறி விலக்கல் செவிலிக்குத் தோழி
யறத்தொடு நிற்ற னற்றாய்க்குச் செவிலி
யறத்தொடு நிற்ற றேர்வர வுரைத்தன்
மணமுரசு கேட்டு மகிழ்ந்து ரைத்த
லையுற்றுக் கலங்க லவனிதி காட்ட
லாறைந் துடனே கூறிய மூன்றும்
விரைமலர்க் குழலாய் வரைபொருட் பிரிதல்.
வரைபொருட்பிரிதல் இதன் பொருள்
முலைவிலைகூறல், வருமது கூறிவரைவுடம்படுத்தல், வரைபொருட்பிரிவையுரையெனக்கூறல், நீயேகூறென்றல், சொல்லாதேகல், பிரிந்தமைகூறல், நெஞ்சொடு கூறல், நெஞ்சொடுவருந்தல், வருத்தங்கண்டுரைத்தல், வழியொழுகி வற்புறுத்தல், வன்புறையெதிரழிந்திரங்கல், வாய்மைகூறிவருத்தந் தணித்தல், தேறாது புலம்பல், காலமறைத்துரைத்தல், தூது வரவுரைத் தல், தூதுகண்டழுங்கல், மெலிவுகண்டுசெவிலிகூறல், கட்டுவைப்பித் தல், கலக்கமுற்றுநிற்றல், கட்டுவித்திகூறல், வேலனையழைத்தல், இன்னலெய்தல், வெறிவிலக்குவிக்க நினைத்தல், அறத்தொடு நிற்றலையுரைத்தல், அறத்தொடுநிற்றல், ஐயந்தீரக்கூறல், வெறி விலக்கல் செவிலிக்குத் தோழி யறத்தொடு நிற்றல், நற்றாய்க்குச் செவிலி அறத்தொடுநிற்றல், தேர்வரவுகூறல் மணமுரசுகேட்டுமகிழ்ந் துரைத்தல், ஐயுற்றுக்கலங்கல், நிதிவரவு கூறாநிற்றல் எனவிவை முப்பத்து மூன்றும் வரைபொருட் பிரிதலாம் எ - று.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.