சுவாமிகள் , ஆரூரிலிருக்கும் நாளில் மலைநாடணை வதற்கு விருப்புக் கொண்டு , ஆரூர்ப் பெருமானிடம் விடை கொண்டு , பல பதிகளையும் வணங்கிக்கொண்டு , கொங்கு நாட்டில் , திருப்புக்கொளியூர் அவினாசி சென்று , நெடுநாள் களுக்கு முன்னர் , முதலை விழுங்கிய மகனை , இறையன்பு மிகுந்த அவனது பெற்றோர்களது துயரத்தை நீக்குதற்பொருட்டு , முதலை வாயினின்றும் அழைத்துத் தருதற்கு அக்குளக் கரைக்கண் சென்று பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 வெள்ளானைச் . சருக் . 10-11.) இதன் நான்காவது பாடல் முடிவதற்குள் , பெருமான் அருளான் முதலை , மகனைக் கரையில் சேர்த்தது . குறிப்பு : இத் திருப்பதிகம் நுதலிய பொருள் , இதன் வரலாற்றானே விளங்கும் , இதன்கண் பலவிடங்களில் பாடங்கள் பலபட ஓதப்படுகின்றன .