சுவாமிகள் , திருக்கூடலையாற்றூர் தொழுது திருமுதுகுன்ற மடைந்து திருக்கோயில் வலம் கொண்டு இறைஞ்சி , ` நஞ்சி யிடை ` என்னுந் திருப்பதிகம் பாடிப் பெருமானிடம் பொன் வேண்டும் குறிப்பினராய் பாடியருளியது இத்திருப்பதிகம் . இப் பதிகம் பாடிப் பன்னிரண்டாயிரம் பொன் பெற்றார் சுந்தரர் . ( தி .12 பெரிய . புரா . ஏயர்கோன் . புரா . 106-107) குறிப்பு : இத்திருப்பதிகம் , இறைவரைப் பலவாற்றால் ஏத்தி , ` நீரே எங்கட்கு எப்பிறப்பிலும் துணை ` என்று குறையிரந்து அருளியது . இதன்கண் , இறைவரை , ` நம்பி ` என்னும் சிறந்த பெயரால் பலகாற் சுவாமிகள் கூறி மகிழ்தல் அறிந்து இன்புறத் தக்கது .