சுவாமிகள் , திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து மகிழ்வுற்றிருக்கும் நாள்களில் , தமிழ்ப்பொதியமலைப் பிறந்த கொழுந்தென்றல் அணைய , திருவாரூர் வீதிவிடங்கப் பெரு மானது வசந்த விழாவை நினைவுகூர்ந்து புற்றிடங்கொண்டிருந் தாரை ஈங்கு நான் மறந்தேன் என்று மிக அழிந்து அவரை நினைந்து பாடியருளியது இத்திருப்பதிகம் . ( தி .12 பெரிய . புரா . . ஏயர்கோன் . புரா . 273) குறிப்பு : இத்திருப்பதிகம் நுதலிய பொருள் இதன் வரலாற்றானே விளங்கும் .