சுவாமிகள் , காஞ்சியில் தங்கியிருந்த நாள்களில் திருஒண காந்தன் தளியை வணங்கிக் கச்சி அனேகதங்காவதம் சென்று தரிசித்துப் பாடியருளியது இத்திருப்பதிகம் . ( தி .12 ஏயர் கோன் . புரா . 192) குறிப்பு : இது ` சிவபிரானுக்கு மிக்க உவகையைத்தரும் இடம் கச்சி அனேகதங்காவதம் ஒன்றே ` என , அத்தலத்தினைப் புகழுமுகத்தால் அப்பெருமானது பெருமைகள் பலவற்றையும் , தோன்ற அருளிச் செய்தது . இதனுள் , ` இடம் ` என்பன பலவும் , ஒரு பெயர் குறித்த வேறு பெயர்க் கிளவிக்குப் ( தொல் . சொல் . 42.) பெயர்தொறும் வந்த ஒரு முடிபாதல் அறிக .