பெருமான் தூண்டு தவ விளக்கனையாராகிய திலக வதியார் வேண்டுகோளின் வண்ணம் , சமண மதத்தைப் பற்றி நின்ற சுவாமிகளுக்குச் சூலைநோய் கொடுத்து ஆட்கொண்ட செய்தியறிந்த சமணர் தம் சமயம் வீழ்ந்தது என மருண்டனர் . இத்திறம் அறிந்திடின் வேந்தனும் வெகுண்டு சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் என்றஞ்சி அரசனிடம் சென்று , ` தரும சேனர் பிணியுற்றாராய்ச் சடையானுக்காளாய் நின்சமயம் அழித் தார் , அவரை அலைத்தல்வேண்டும் ` என்றனர் . பல்லவனும் மந்திரிகளை நோக்கி ` பொருள் கொண்டு விடாது தரும சேனரைக் கொண்டு வாரும் ` எனப் புகன்றான் . அரசன் பணியைச் சிரமேற்கொண்ட அமைச்சர் அதிகைப்பதி சென்று அரசன் ஆணையைத் தெரிவித்தபொழுது அதற்கு மறுமொழி யாகப் பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 93.) குறிப்பு : இத் திருப்பதிகத்தினால் , சிவபிரானுக்கு அடியவராயினாரது பெருமை இனிது விளங்கும் .