தாண்டகவேந்தர் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி யருளினார். அதன் பின் நாலூர், திருச்சேறை, குடவாயில், நறையூர் முதலிய தலங்களில் உள்ள உமையொருபாகர் திருவடி போற்றினார், அக்காலை, விடைக்கொடியார் மேவுமிடங்கள் பலவற்றைப் பாடியருளியவற்றுள், ஒன்றாகலாம் இப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 216).
றிப்பு: இத்திருப்பதிகம், `காண்` என்னும் முடிபுடைய தொடர் களால், சிவபிரானது பெருமைகளை வகுத்தருளிச் செய்தது.