நாவரசர் ஆவடுதண்டுறையீசரைப் பணிந்து பாமாலை கள் பல சாத்தித் திருஇடைமருதூர் அடைந்து வணங்கி, அங்குத் தங்கி அன்பினால் சாத்தியருளிய வண்டமிழ்ப் பாமாலைகள் பலவற்றுள் அமைந்தவை, இத் திருப்பதிகமும் அடுத்து வரும் திருப்பதிகமும். (தி.12 தி ருநாவு. புரா. 192)
குறிப்பு: இத்திருப்பதிகத்துள் வரும், `போலும்` என்பன உரை அசைகள். எனவே, இது, `போலும்` என்னும் முடிபுடைய தொடர்க் கோவையால் இறைவனைப் பரவியதாம். வடமொழி மந்திரங்கள் `நம` முதலிய ஏழு முடிபுகளை உடையனவாய் வருதல்போல, இத் தமிழ் மந்திரங்கள், `போற்றி, காண், தாமே, கண்டாய், போலும் முதலிய முடிபுகளை உடையனவாய் வந்துள்ளன என்க.