பொய்கைசூழ் பூம்புகலூர்ப் புனிதர் மலர்த்தாள் வணங்கி , நையும் மனப்பரிவினொடு , நாள்தோறும் திருமுன்றிற் கைகலந்த திருத்தொண்டு செய்து , பெருங்காதலுடன் வைகும் நாளில் , எண்ணிறந்த வண்டமிழ் மாலைகள் சார்த்தினார் அப்பர் . அவற்றுள் ` ஒன்று நேர்படநின்று அறைகூவும் ` இத் திருப்பதிகம் .