திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கின்ற முக்கட் பரமேட்டியைத் தொழுது , அங்கிருந்து , பிள்ளையார் ஐயாறு சென்றடைந்தார்கள் . ஐயாற்று அடியார்கள் அனைவரும் ` சிவ ஞானத் தெள்ளமுது உண்ட திருஞான சம்பந்தப் பிள்ளையார் எழுந்தருளினர் ` என்று ஊரை அலங்கரித்தனர் . மனக்களிப் போடு எதிர்கொண்டு அழைத்தனர் . நந்தி அருள் பெற்ற நன்னக ராகிய ஐயாற்றை முதற்கண் வணங்கிப் புலனைந்தும் நிலை கலங்குமிடத்து அஞ்சல் என்பார்தம் ஐயாறு என்று சிறப்பிக்கும் இப்பதிகத்தைப் பாடியருளினர் . இதனைச் சேக்கிழார் பெருமான் ` புந்திநிறை செந்தமிழின் சந்த இ? u2970?` என வாயாரப் போற்று வார்கள் .
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.