கொடிமாடச் செங்குன்றூரில் சிவஞானச் செம்மலார், அடியார்களுடன் தங்கியிருந்த காலத்துப் பனிக்காலம் வந்து விட்டது. அதனால் அடியார்கள் நளிர் சுரத்தினால் வருந்தினார்கள். பிள்ளையாரிடம் விண்ணப்பம் செய்து கொண்டனர். `இந்த நளிர் சுரம் வருதல் இந்நாட்டிற்கு இயல்பாயினும் நமக்கு இந்தநோய் எய்தப்பெறா. நீலகண்டமே எந்நாளும் அடியார் இடர்தீர்க்கும் அருந்துணை` என்று எண்ணி `அவ்வினைக் கிவ்வினை` என்னும் திருப்பதிகத்தைத் தொடங்கி, ஒவ்வொரு திருப்பாடல் இறுதியிலும் ` செய்வினை தீண்டா திருநீல கண்டம` என ஆணைவைத்து அருளிச்செய்தார்கள். உடனே அடியார்களுக்குமட்டுமன்றி அந்நாட்டிலேயே சுர நோய் தொலைந்தது.