திருஅறையணிநல்லூரை வழிபட்ட பிள்ளையாருக்கு , அன்பர்கள் அண்ணாமலையைக் காட்டினார்கள் . அண்ணா மலை , இறைவன் திருவுருவாகவே காட்சியளித்தது . அதனைக் கண்ணாற்பருகிக் கைதொழுது கலந்து போற்றுங்காதலினால் இப் பதிகத்தை அருளிக்கொண்டே தலத்தையடைகின்றார்கள் . இப் பதிகமும் சேய்மையில் அண்ணாமலையை அன்பர் காட்டக் கண்டு தொழுது பாடியதாகவே சேக்கிழார் தெரிவிக்கின்றார் . ( பெரிய . திருஞா . 969, 970.) இப்பதிகப் பாடல்கள் உள்ளவாறே பொருள் கொள்ள அமைந்தவை .