திருக்களிற்றுப்படியார்


பண் :

பாடல் எண் : 1

அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்
எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்.

பொழிப்புரை :

அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணமென்றறிக; அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் அம்மையப்பராகிய சிவன் அந்தச் சத்தி வழியாக வந்து மோட்சத்தைக் கொடுப்பார்; அம்மையப்பர் எல்லா உலகிற்கும் அப்புறத்தார் சிவன் ஆறத்துவாவினும் பொதுவியல்பாற் கலந்திருப்பினுந் தன்னியல்பால் அப்பாற்பட்டவர்; இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர் இப்படிக் கலந்திருப்பினுங் கலவாதாரைப் போன்று சுட்டிக் காணப்படார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாமுணரில் - தம்மில்
நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கிநிலை யாக்கித்
தலைப்படுவர் தாமத் தலை.

பொழிப்புரை :

அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணமென்றறிக; அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் அம்மையப்பராகிய சிவன் அந்தச் சத்தி வழியாக வந்து மோட்சத்தைக் கொடுப்பார்; அம்மையப்பர் எல்லா உலகிற்கும் அப்புறத்தார் சிவன் ஆறத்துவாவினும் பொதுவியல்பாற் கலந்திருப்பினுந் தன்னியல்பால் அப்பாற்பட்டவர்; இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர் இப்படிக் கலந்திருப்பினுங் கலவாதாரைப் போன்று சுட்டிக் காணப்படார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

என்னறிவு சென்றளவில் யானின்(று) அறிந்தபடி
என்னறிவி லாரறிக என்றொருவன் - சொன்னபடி
சொல்லக்கேள் என்றொருவன் சொன்னான் எனக்கதனைச்
சொல்லக்கேள் யானுனக்(கு) அச் சொல்.

பொழிப்புரை :

என்னறிவு சென்றளவில் யான் நின்று அறிந்தபடி என்னுடைய போதங் கழன்றவிடத்து யான் மாத்திரம் நின்று சிவஞானத்தை யறிந்த முறைமை யெப்படி என்னில்; என்னறிவிலார் அறிக என்று ஒருவன் சொன்னபடி சொல்லக்கேள் என்று ஒருவன் சொன்னான் எனக்கதனை என்னறிவென்கிற தன்மையில்லாதவர்களே கேட்பீராக என்றொருவன் சொன்ன முறையே அந்த உபதேசத்தை எனக்குச் சொல்லக்கேள் என்றொருவன் சொன்னான்; சொல்லக்கேள் யான் உனக்கு அச்சொல் அந்த உபதேசத்தை யான் உனக்குச் சொல்லுகிறேன் கேட்பாயாக.
இதனுள், குருபரம்பரை இல்லாமற் சிவஞானம் பிரவேசியாதென்பதும் இந்நூல் குருபரம்பரை யுபதேசத்தைப் பெற்றுப் பாடின நூலென்பதுங் கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

அகளமய மாய்நின்ற அம்பலத்தெங் கூத்தன்
சகளமயம் போல்உலகில் தங்கி – நிகளமாம்
ஆணவ மூல மலம்அகல ஆண்டான்காண்
மாணவக என்னுடனாய் வந்து.

பொழிப்புரை :

அகளமயமாய் நின்ற அம்பலத்தெங் கூத்தன் - அரூபியாய் நின்ற சிவனானவன்; சகளமயம்போல் உலகில் தங்கி சரீரமெடுக்கிறவர்களைப்போல இந்தப் பூமியிலே திருவுருக் கொண்டு; நிகளமாம் - ஆணவ மூலமலம் அகல ஆண்டான் காண் மாணவக என்னுடனாய் வந்து என்னுடனே கூடியிருந்து விலங்குபோலும் ஆணவமாகிய மூலமலமானது என்னை விட்டு நீங்கும்படிக்கு அடிமையாகக் கொண்டான். சீடனே, இந்த அதிசயத்தை அறிவாயாக.
ஆணவம் அகலவே கன்மமும் மாயையும் அகலுதல் கூற வேண்டாமென்பது கருத்து. இதனுள் சிவன் திருமேனி கொண்டாலொழிய ஆன்மாக்களுக்கு முத்தியில்லை யென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே
யோகங்க ளெங்கே உணர்வெங்கே - பாகத்(து)
அருள்வடிவுந் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யாரறிவார் பேசு.

பொழிப்புரை :

ஆகமங்கள் எங்கே அறுசமயந் தானெங்கே யோகங்கள் எங்கே உணர்வெங்கே - இருபத்தெட் டாகமங்களையும் ஆரறிவார், சித்தியார் சுபக்கம் 1ம் பாட்டுரையிற் காண்க. ஆறு சமயங்களினுடைய நீதியையும் ஆரறிவார், யோகப்பயிற்சியையுஞ் சிவனுடனே கூட்டத்தையும் ஆரறிவார், சிவஞானத்தினுடைய முறைமையையும் ஆன்மபோதத்தினுடைய முறைமையையும் ஆரறிவார்; பாகத்து அருள்வடிவுந் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப் பெருவடிவை யாரறிவார் பேசு மலபரிபாகத்திலே அருளாகிற திருமேனியுந் தானுமாக வந்து அடிமை கொள்ளாதே போனால் முடிவாகிற பேரின்பத்தை ஒருவராலும் அறியக்கூடாது; கூடுமாயிற் சொல்லுவாயாக.
புறச்சமயமாறெனினும் பக்கத்தருளெனினும் அந்தப் பேரின்பமெனினுமாம். இதனுள், சிவன் திருமேனி கொள்ளாதே போனால் ஆகமமுதலாகிய கலைகளையும் அன்னிய சமயங்களினுடைய இழிபையும் யோகமுதலிய கிரியைகளையும் அறியக்கூடாதென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமோ – ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு.

பொழிப்புரை :

மேகத்தின் வாய்ப்பட்ட தண்ணீரைச் சிறிது குடித்தாலும் தாகம் தணிகிறதுபோலச் சமுத்திரத்து நீரைப் பெருகக் குடித்தாலுந் தாகந் தணியாது; இதுபோல, நல்ல குருவினுடைய சில வார்த்தைகளினாலே உள்ளந் தெளிகிறதுபோல வெகுநூல்களைக் கற்றாலும் உள்ளந் தெளியாது; தெளியுமானால், தெள்ளிய அறிவினையுடைய சீடனே, சொல்லுவாயாக.
இதனுள், குருவையின்றி நூல்களைக் கற்கிற் பயனில்லையென்று கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

இன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில்
நின்ற மலமனைத்தும் நீக்கினதாங் – கென்றால்
உருவுடையான் அன்றே உருவழியப் பாயும்
உருவருள வல்லான் உரை.

பொழிப்புரை :

இன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில் நின்ற மலமனைத்தும் நீக்கினது - இப்பொழுது கோமயமல்லவோ இப்பூமியின் கண்ணுள்ள பல விகார முதலிய ஆசூசங்களை நீக்குவது; ஆங்கென்றால் ஆசாரியர் திருமேனி கொண்டு பிறவியறுக்கிறதும் அதுபோலவானால்; உருவுடையான் அன்றே உருவழியப் பாயும் உருவருள வல்லான் உரை சிவன் நம்மைப் போல சரீரத்தையுடையனல்லவே, நம்முடைய பிறவி அழியும்படிக்குத் தோன்றுந் திருவருளாகிய திருமேனியெடுக்கவல்லவனே; இதற்கு மாறுபாடுண்டாகிற் சொல்லுவாயாக.
இதனுள், ஆசாரியர் திருமேனி இருமாயையிலே யுண்டான சரீரமல்லவென்பது உவமையினாலே கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவரே
அண்டத்தின் அப்புறத்த தென்னாதே – அண்டத்தின்
அப்புறமும் இப்புறமும் ஆரறிவுஞ் சென்றியும்
எப்புறமும் கண்டவர்கள் இன்று.

பொழிப்புரை :

கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவரே கண்ணிலே காணப்பட்ட ஆசாரிய மூர்த்தத்தைக் கொண்டு தங்களுடைய போதத் தொழிலைக் கெடுத்தவர்களே; அண்டத்தின் அப்புறத்த தென்னாதே சீவன்முத்தித் தன்மை யுடையதிது பரமுத்தித் தன்மையினையுடையதிது என்று இரண்டு தன்மையையு மிடையிட்டுக் காணாமல்; அண்டத்தின் அப்புறமும் இப்புறமும் ஆர் அறிவுஞ் சென்றறியும் எப்புறமுங் கண்டவர்கள் இன்று பரமுத்தியையுஞ் சீவன் முத்தியையும் எல்லா ஞானவான்களுடைய அறிவும் பொருந்தி யறியுந் திரிபதார்த்தங்களையும் (=பதி பசு பாசங்களையும்) இப்பொழுதே மயக்கமற அறிந்தவர்கள்.
இதனுள், ஆன்மபோதம் இறந்தாலொழியச் சுபாவதெரிசனமுண்டாகாதென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

அன்றுமுதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்குள் இன்னதெனச் சென்றதிலை – இன்றிதனை
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்
அவ்வா றிருந்த தது.

பொழிப்புரை :

அன்று முதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச் சென்றவர்க்குள் இன்னதெனச் சென்றதிலை - அனாதி தொடுத்துக் கர்த்தாவுக் காளாய்த் திருவருளுடனே கூடிப் பின்பு நேயத்திற் சென்றவருக்குள் ஒருவரானாலும் சிவானுபவம் இப்படியிருந்ததென்று சொல்ல இதுவரையும் உவமை பொருந்தினதில்லை யாகையால்; இன்று இதனை இவ்வாறிருந்ததென்று எவ்வண்ணஞ் சொல்லுகேன் அவ்வாறிருந்த தது இப்போது இந்தச் சிவானுபத்தை இப்படியிருந்ததென்று எப்படிச் சொல்லப்போகிறேன், அந்தச் சிவானுபவம்போல இருந்தது.
இதனுள், சிவானுபவத்துக்கு வேறோர் உவமை சொல்லக்கூடாதென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

ஒன்றும் குறியே குறியாத லால்அதனுக்
கொன்றுங் குறியொன்றி லாமையினால் - ஒன்றோ(டு)
உவமிக்க லாவதுந் தானில்லை ஒவ்வாத்
தவமிக்கா ரேயிதற்குச் சான்று.

பொழிப்புரை :

ஒன்றுங் குறியே குறியாதலால் அதனுக்கு ஒன்றுங் குறியொன்றிலாமையினால் - நேயத்தைப் பொருந்து முறைமையே யனுபவவுண்மை யாதலால் அந்த அனுபவத்துக்குப் பொருந்தும் அடையாள மில்லாதபடியினாலே; ஒன்றோடு உவமிக்கலாவதுவுந் தானில்லை ஒவ்வாத் தவம் மிக்காரே இதற்குச் சான்று ஒரு பொருளோடு உவமை பண்ணிச் சொல்லவும்படாது, தவத்தினாலே ஒப்பற்ற பெரியோர்களே இந்த அனுபவத்துக்குச் சாட்சி.
இதனுள், அனுபவத்தைத் தவத்தினாலன்றிக் காணப்படாதென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

ஆற்றால் அலைகடற்கே பாய்ந்தநீர் அந்நீர்மை
மாற்றிஅவ் வாற்றான் மறித்தாற்போல் – தோற்றிப்
புலன்களெனப் போதம் புறம்பொழியில் நந்தம்
மலங்களற மாற்றுவிக்கும் வந்து.

பொழிப்புரை :

ஆற்றால் அலைகடற்கே பாய்ந்த நீர் அந்நீர்மை மாற்றி அவ்வாற்றான் மறித்தாற்போல் திரையையுடைய சமுத்திரத்தினிடத்திலே ஆறென்கிற பூமிவழியாக வந்து பாய்ந்த இனிமைத் தன்மையையுடைய நீரானது அந்த இனிமைத் தன்மையை விட்டு உவர்த்தன்மை பெற்று ஆற்றின் வழியே மீண்டாற்போல ; தோற்றிப் புலன்களெனப் போதம் புறம்பொழியில் நந்தம் மலங்களற மாற்றுவிக்கும் வந்து ஞானவான்கள் போதம் நேயத்திலே பொருந்திய பின்பு பெத்தான்மாக்கள் போதம்போலப் பிரபஞ்சத்திலே சென்றால் நம்மைப் பொருந்தியிருக்கிற மலமாயை கன்மங்கள் நீங்கும்படிக்கு நீக்குவிக்கும்.
ஒழியிலென்னுமெச்சம் ஒழியாதென்பது தோன்ற நின்றது. வந்த தென்பதை ஆற்றாலென்பதனோடு கூட்டுக. உவமை யுவமேயங்களை விரித்துணர்ந்து கொள்க. இதனுள் முத்தருடைய போதம் பெத்தருடைய போதம் போல வல்ல வென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனைஅன் றேவிக் கராங்கொண்ட – பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங்
கரணம்போல் அல்லாமை காண்.

பொழிப்புரை :

பாலை நிலம் நெய்தல் நிலமாகப் பாடிய தன்மையையும் பாம்பு விடந்தீரும்படிக்குப் பாடிய தன்மையையும் முன்பு முதலை விழுங்கின சிறுபிள்ளையுடைய மரணத்தைப் பின்பு காலனை யேவித்தீர்த்த தன்மையையும் அறிந்து, அந்தத் தெய்வத்தன்மையுடையவர்களுக்கு நம்முடைய கருவிகள் போல வல்லாமையைத் தெரிவாயாக.
பாம்பு ஆகுபெயர். அறிந்தென்னும் எச்சம் வருவிக்க. இதனுள், முன்னூற் சூத்திரத்திற் றொகையை விரித்தது கண்டுகொள்க. இக்கதையைப் பெரிய புராணத்திற் கண்டு கொள்க. (பாலை நெய்தல் பாடியது சம்பந்தர், பாம்பொழியப் பாடியது அப்பரும் சம்பந்தரும், கராங்கொண்ட பாலன் மரணந் தவிர்த்தது சுந்தரர்.)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின்
தாங்களே சட்ட உறங்குவர்கள் – ஆங்கதுபோல்
ஐயன் அருட்கடைக்கண் ஆண்டதற்பின் அப்பொருளாய்ப்
பைய விளையுமெனப் பார்.

பொழிப்புரை :

நித்திரை வந்தவர்களை நல்ல மெத்தையிலே கிடத்தின் பின்பு தாங்கள் தானே சீக்கிரத்தில் உறங்குவார்கள்; அதுபோல ஞானசாரியருடைய கிருபாகடாட்சம் அடிமைகொண்ட பின்பு அந்த அருள் வந்து பொருந்திக் கிரமத்திலே நேயமும் வந்து பொருந்துமென்றறிவாயாக.
சட்ட : திசைச்சொல். உவமையுவமேயம் உய்த்துணர்ந்து கொள்க. இதனுள், ஆசாரியருடைய தீட்சையில்லாமல் ஞானம் வாராதென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

உள்ள முதலனைத்தும் ஒன்றாய் ஒருவவரின்
உள்ளம் உருகவந் துன்னுடனாம் – தெள்ளி
உணருமவர் தாங்கள் உளராக என்றும்
புணருவா னில்லாப் பொருள்.

பொழிப்புரை :

உள்ள முதலனைத்தும் ஒன்றாய் ஒருவவரின் உள்ளம் உருகவந்து உன்னுடனாம் பிருதிவி முதல் நாதமீறாகிய தத்துவங்களைப் பொருந்து முறைமையை யன்னியமாக்க வந்தால் ஆன்மாவாகிய அரக்கு நெகிழும்படிக்கு நேயமாகிய அக்கினி வந்து உன்னுடனே கூடி நிற்கும்; இப்படியன்றி; தெள்ளி உணருமவர் தாங்கள் உளராக என்றும் புணருவானில்லாப் பொருள் கருவிகளுடனே கூடி விசாரித்தறிகிற பேருண்டானால் எக்காலமும் விட்டு நீங்காமல் நிற்கிற கர்த்தா வில்லாத பொருள் போல மறைந்து நிற்பன்.
இதனுள், கருவிகளினாலே சிவனைக் காணப்படாதென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நானழிய – வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனுங் காணா அரன்.

பொழிப்புரை :

நல்ல சிவன்தன்மமான சரியையையுடையவன் கிரியையையுடையவன் நல்ல சிவயோக தன்மத்தையுடையவன் நல்ல சிவஞானத்தையுடையவன் இவர்களில் யாவரானாலும் நானென்கிற தன்மை கெட்ட வல்லமையினாலே அன்பு செய்தார்களாயின் அவர்களிடத்திலே, ஆன்மபோதமுள்ளவர்களுக்குள்ளே ஒருவராலுங் காணுதற்கரிதான சிவன் அப்பொழுதே வந்து கூடுவானென்றறிவாயாக.
இதனுள்ளே, ஆன்மபோதங் கெட்டவர்கள் எந்தப் 1பாதத்திலே நின்றாலும் ஞானபாதமென்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

மெல்வினையே யென்ன வியனுலகில் ஆற்றரிய
வல்வினையே யென்ன வருமிரண்டும் – சொல்லிற்
சிவதன்மம் ஆமவற்றிற் சென்றதிலே செல்வார்
பவகன்மம் நீங்கும் படி.

பொழிப்புரை :

மெல்வினையென்று சொல்லவும் விசாலம் பொருந்திய பூமியினுள்ளார் செய்தற்கரிதாகிய வல்வினையென்று சொல்லவும் வரப்பட்ட இரண்டும் ஆகமத்திலே சொல்லப்பட்ட சிவன் தன்மமாம்; அவையிரண்டிலே அவரவர் மனம் பொருந்தினதிலே போவார், செனனமும் அந்தச் செனனத்துக்குக் காரணமாகிய கன்மும் நீங்கும்படிக்கு.
எழுவாய் வருவிக்க. இதனுள், ஞானமானது மெல்வினையென்றும் வல்வினையென்றும் இருவகைப்படுமென்பது கண்டுகொள்க. பத்திவைராக்கிய மெனினுமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 17

ஆதியை அர்சித்தற் கங்கமும் அங்கங்கே
தீதில் திறம்பலவும் செய்வனவும் – வேதியனே
நல்வினையாம் என்றே நமக்கும்எளி தானவற்றை
மெல்வினையே யென்றதுநான் வேறு.

பொழிப்புரை :

கர்த்தாவை - வழிபடுதற்கங்கமான அந்தரியாகம் - மனத்திற்குள் செய்யும் வழிபாடு, மானச பூசை; பகிரியாகம் - வெளிப்படச் செய்யும் வழிபாடு. அந்தரியாக பூசையையும் பகிரியாக பூசையையும் அந்தந்த அவசரங்களிலே செய்யும் பஞ்ச சுத்தி முதலான கூறுபாட்டையுடைய குற்றமற்ற பல கிரியைகளையும் அனுட்டான முதலான கிரியைகளையும் நான் வேறுபடுத்தி மெல்வினையென்று சொன்னது, சித்தசித்துக்களோடு கலந்திருக்கிறவனே, அரிய தொழில் செய்யப்படாத நமக்கும் எளிதாயிருக்கிற இவற்றை நல்வினையா மென்று கருதி.
இதனுள் மெல்வினைக்கு வகை சொன்னது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 18

வரங்கள் தரும்செய்ய வயிரவர்க்குத் தங்கள்
கரங்களினால் அன்றுகறி யாக்க - இரங்காதே
கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானதனை
வல்வினையே யென்றதுநான் மற்று.

பொழிப்புரை :

பலன்களைத் தரப்பட்ட சிறப்பாக வயிரவ வேடத்தைக் பூண்ட சிவனுக்குக் கறியமுது சமைக்கும் பொருட்டுத் தயவில்லாமல் ஆதியிலே மாதா பிதாக்கள் தங்கள் கைகளினாலே பிள்ளையை யறுத்தலைச் செய்யுங் கொடிய வினையையே நான் வல்வினையென்று சொன்னது. மற்றுஅசை, செயப்படுபொருள் வருவிக்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 19

பாதகமே யென்றும் பழியென்றும் பாராதே
தாதையை வேதியனைத் தாளிரண்டும் – சேதிப்பக்
கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே
தண்டீசர் தஞ்செயலால் தான்.

பொழிப்புரை :

சண்டேசமூர்த்தி ஒருவர் ஏவாமல் தம்முடைய பத்தியினாலே கொலைத் தொழிலென்றுந் தோடமென்றும் விசாரியாமல் தகப்பனாகிய பிராமணனுடைய காலிரண்டையுஞ் சிவத்துரோகத்தினாலே வெட்டிப் போடுதலைக் கர்த்தாவானவர் கண்டு சிவனாயிருக்கிற முறைமையைக் கொடுத்தார். இந்தப் பத்தியை அறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 20

செய்யில் உகுத்த திருப்படி மாற்றதனை
ஐய இதுவமுது செய்கென்று - பையவிருந்(து)
ஊட்டி யறுத்தவர்க்கே ஊட்டி அறுத்தவரை
நாட்டியுரை செய்தவே நாம்.

பொழிப்புரை :

நாம் பத்தி பண்ணினவர்களுக்குள்ளே மேம்பட்டவரென்று நாட்டிச் சொல்லுவது யாரையென்றால், கமர்நிலத்தின் கண்ணே சொட்டுதலாலே மாறிப்போன படிக்கட்டளையை ‘ஐயனே, இப்ப டிச் சோர்ந்து போனதை அமுது செய்வாயாக’ என்று மனதிலே பயமில்லாமல் தம்முடைய கழுத்தையறுத்து அந்தக் கர்த்தாவுக்குப் புசிப்பித்து மூன்று பாசத்தையும் விடுத்தவரையே. இவை மூன்று செய்யுளில் வல்வினைக்கு வகை சொன்னது.இப்படிப் பலபல வகை யுண்டென்பது கருத்து. அவையெல்லாம் பெரிய புராணத்தறிக. (அரிவாட்டாய நாயனார் புராணம்)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 21

செய்யும் செயலே செயலாகச் சென்றுதமைப்
பையக் கொடுத்தார் பரங்கெட்டார் – ஐயா
உழவும் தனிசும் ஒருமுகமே யானால்
இழவுண்டோ சொல்லாய் இது.

பொழிப்புரை :

சீடனே, உழவுத் தொழில் செய்கிறவனுக்கும் அதனை ஏவுகிற கர்த்தாவுக்கும் புத்தி ஒருபடித்தாய் இருந்ததேயானால் அந்தத் தொழில் செய்கிறவனுக்கு ஒருகாலும் குறைவாராது; இதுபோலத் தாங்கள் செய்யுஞ் செயலிலே கர்த்தாவினுடைய செயலாகப் பொருந்தித் தங்களைக் கிரமத்திலே கர்த்தாவுக்குக் கொடுத்தவர்களே ஆன்மபோதமாகிற சுமையை யிறக்கிச் சுகமாயிருப்பார்கள்.
உழவுக்குப் பெயர் தனிசு; திசைச் சொல். இதனுள், ஆன்ம போத மிறந்த அறுபத்துமூவர் முதலான பெரியோர்களைப் பொதுப்படக்கூறி வல்வினைக்கு விரிவு சொன்னது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

ஆதார யோக நிராதார யோகமென
மீதானத் தெய்தும் விதியிரண்டும் - ஆதாரத்(து)
ஆக்கும் பொருளாலே ஆக்கும் பொருளாமொன்(று)
ஆக்காப் பொருளேயொன் றாம்.

பொழிப்புரை :

மேம்பட்ட சுகத்தை யனுபவிக்கிற முறைமை ஆதாரயோகமென்றும் நிராதார யோகமென்றும் இருவகைப்படும்; அதேதென்னில், பிரபஞ்சத்தை உண்டாக்கப்பட்ட திருவருளாலே கொடுக்குஞ் சுகமொன்று திருவருளினாலே கொடுக்கப்படாமற் சிவனாலே கொடுக்குஞ் சுகமொன்று என்றிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 23

ஆக்கி ஒருபொருளா ஆதாரத் தப்பொருளை
நோக்கி அணுவில் அணுநெகிழப் – பார்க்கில்
இவனாகை தானொழிந்திட் டேகமாம் ஏகத்(து)
அவனாகை ஆதார மாம்.

பொழிப்புரை :

பிரபஞ்சத்திலே யுண்டான விடயங்களை விசாரித்தறிந்து இவையெல்லாம் பலபல வல்ல மாயை யொன்றுமே யென்று அன்னியமாக்கித் தன்னிலே தன்னை விளங்க விசாரித்தானாகில், நம்முடைய போதத்தினாலே சீவித்தோமென்கிற தன்மை கெட்டுத் திருவருளோடே யொன்றாவன்; அப்படி யொன்றாகிற தன்மையே ஆதாரமாம்.
இதனுள் ஆதாரயோகத்துக்கு உபாயஞ் சொன்னது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 24

கொண்ட தொருபொருளைக் கோடிபடிடக் கூறுசெய்யிற்
கொண்டதுவும் அப்பரிசே கூறுபடும் – கொண்ட
இருபொருளும் இன்றியே இன்னதிது வென்னா(து)
ஒருபொருளே யாயிருக்கும் உற்று.

பொழிப்புரை :

தான் பொருந்தப்பட்ட ஒப்பற்ற திருவருளைப் புதுமையுண்டாக நீக்கினானாயில் திருவருளும் வந்த முறையை விட்டு நீங்கும்; அப்பாற் பொருந்தின சிவனுந் தானும் இரண்டொன்கிறதுமின்றி இந்தக் கூட்டம் இன்னதுபோல விருந்ததென்று சொல்லப்படாமல் ஒரு பொருளாகப் பொருந்தியிருக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 25

ஆக்கப் படாத பொருளாய் அனைத்தினிலும்
தாக்கித்தான் ஒன்றோடும் தாக்காதே – நீக்கியுடன்
நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய்
நிற்கை நிராதா மாம்.

பொழிப்புரை :

ஒருவராலே யுண்டாக்கப்படாத பொருளாய் எல்லாவற்றினுந் தோய்ந்துந் தோயாமல் தனக்கு அன்னியமாக நீக்கிக் கூடிநிற்குந் திருவருளுடனே பொருந்துஞ் சிவனைக் கூடிநிற்குந் தன்மையே நிராதாரமாம். இவை இரண்டு செய்யுளானும் நிராதாரயோகத்துக்கு உபாயஞ் சொன்னது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 26

அஞ்செழுத்து மேஅம்மை அப்பர்தமைக் காட்டுதலால்
அஞ்செழுத்தை ஆறாகப் பெற்றிருந்தே – அஞ்செழுத்தை
ஓதப்புக் குள்ள மதியுங் கெடிலுமைகோன்
கேதமற வந்தளிக்குங் கேள்.

பொழிப்புரை :

பஞ்சாட்சரமே சத்தியையுஞ் சிவனையும் காட்டுகிற படியினாலே அந்தப் பஞ்சாட்சரத்தைப் பேரின்பத்துக்கு வழியென்று கொண்டு, ஒரு தானத்திலே அசைவற்றுத் தியானத்தோடேயிருந்து பஞ்சாட்சரத்தைச் செபிக்கத் தொடுத்தால், ஆன்மபோதங்கெடும்; கெட்டவுடனே கர்த்தாவந்து குற்றமறக் கிருபை பண்ணுவன்; இந்த உண்மையைக் கேட்பாயாக. இதனுள், முன்சொன்ன உபாயங் கூடாதே போனால் வேறோர் உபாயங் கூறியது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 27

காண்கின்ற தோர்பொருளைக் காண்கின்ற யோகிகளே
காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் – காண்கின்றார்
காண்பானுங் காணப் படும்பொருளும் இன்றியே
காண்கையினாற் கண்டனரே காண்.

பொழிப்புரை :

காணுந் தொழிலையுடைய ஆன்மாவைத் தெரிசித்த பெரியோர்களே சிவனைக் காணாமற் காண்பர்கள்; காணாமற் காண்கின்ற தெப்படியென்னில், காண்கின்ற பேர்கள் காண்கின்றவனுங் காணப்பட்ட பொருளுமென்கிற இரண்டு தன்மையு மில்லாமற் காண்கையினாலே காணாமற் காண்பர்களென் றறிவாயாகா.
இதனுள் நேயத்தழுந்தல் சொன்னது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 28

பேசாமை பெற்றதனிற் பேசாமை கண்டனரைப்
பேசாமை செய்யுள் பெரும்பெருமான் – பேசாதே
எண்ணொன்றும் வண்ணம் இருக்கின்ற யோகிகள்பால்
உண்ணின்றும் போகான் உளன்.

பொழிப்புரை :

பேசாமையாகிய அருளைப் பெற்று அந்த அருளாலே பேசாமையாகிய சிவனைக் கண்டவர்களுக்குப் பேசாமையை யுண்டாக்குங் கர்த்தாவானாவன் பேசாம லனுபவம் பொருந்தும் படிக்கு இருக்கிற பெரியோர்களிடத்திலே நின்று நீங்காமல் நிற்பன்.
இதனுள் சிவனுக்கிருப்பிடம் பெரியோர்களென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 29

ஓட்டற்று நின்ற உணர்வு பதிமூட்டித்
தேட்டற்று நின்ற இடஞ்சிவமாம் – நாட்டற்று
நாடும் பொருளனைத்தும் நானா விதமாகத்
தேடுமிடம் அன்று சிவம்.

பொழிப்புரை :

சலனமில்லாமலிருக்கிற திருவருளாகிய பதியைப் பொருந்தி அப்பால் தேட்ட மில்லாமலிருக்கிற இடம் சிவமாம். ஞானக்கண் இல்லாமல் நானாவிதமாக விசாரிக்கும் பொருளெல்லாவற்றையுந் தேடுமிடமல்ல சிவம்.
இதனுள் திருவருளைக் கூடிநிற்கு முறைமை சொன்னது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 30

பற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து
பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற – பற்றதனைப்
பற்றிவிடில் அந்நிலையே தானே பரமாகும்
அற்றமிது சொன்னேன் அறி.

பொழிப்புரை :

ஐம்பொறிகளினின்றுஞ் சீவிக்கப்பட்ட பஞ்ச இந்திரியங்களை நீக்குகிற ஒப்பற்ற திருவருளை யறிந்து அந்த அருளை இன்பமாகக் கொண்டிருந்து அப்பாற் பார்க்கின்ற சிவத்திலே பொருந்திப் பற்றுவிடாதிரு. அப்பொழுதே பேரின்பந் தோன்றும். இந்த உபதேசத்தை முடிவாகச் சொன்னேன் அறிவாயாக.
இதனுள் திருவருளைக் கழன்று நிற்கு முறைமை சொன்னது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 31

உணராதே யாதும் உறங்காதே உன்னிற்
புணராதே நீபொதுவே நிற்கில் – உணர்வரிய
காலங்கள் சொல்லாத காத லுடன்இருத்தி
காலங்கள் மூன்றினையும் கண்டு.

பொழிப்புரை :

சிவானுபவத்தின்கண் வேறொன்றையும் உணராமல் நிருவிகாரி யாகாமலும் உன்னுடைய பெந்தத்தோடுங் கூடாமற் சிவத்துக்கும் அனுபவத்துக்கும் பொதுவாக நிற்பாயாகில், பாசம் ஆன்மா அருள் இவை மூன்றினுடைய அதிகார காலங்களை விசரித்தறிந்து இந்தக் காலங்கள் செல்லாத பெத்தரால் அறிதற்கரியதாகிய விருப்பத்தோடுங் கூடியிருப்பை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 32

அறிவறிவாய் நிற்கில் அறிவுபல வாமென்(று)
அறிவின் அறிவவிழ்த்துக் கொண்டவ் – அறிவினராய்
வாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவகா
தாழ்ந்தமணி நாவேபோல் தான்.

பொழிப்புரை :

சீடனே, மானிடரில் நாவையிழந்த மணியைப் போலப் பிரபஞ்சத்தை விட்டவர்கள் ஆன்மா ஆன்மபோதத்தின் வழியாய் நின்றால் அறிவு பலவகைப்படுமென்றறிந்து, திருவருளினாலே ஆன்மபோதத்தை யிழந்த அறிவினராய்ச் சிவானுபவத்தோடுங் கூடி வாழ்ந்திருப்பர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 33

ஓசையெலாம் அற்றால் ஒலிக்குந் திருச்சிலம்பின்
ஓசைவழிச் சென்றங் கொத்தொடுங்கில் – ஓசையினின்
அந்தத்தான் அத்தான் அரிவையுடன் அம்பலத்தே
வந்தொத்தான் அத்தான் மகிழ்ந்து.

பொழிப்புரை :

ஆன்மபோதமெல்லாமற்றால் உண்டாக்கப்பட்ட அருளின் பிரகாசத்தின் வழியே சென்று அந்தத் திருவருளிலே பொருந்தி யொடுங்கில், ஆன்மபோதத்தின் முடிவிலே ஆனந்தத்தைக் கொடுக்கப்பட்ட சிவன் மகிழ்ந்து அம்பலமாகிய ஆன்மாவினிடத்திலே வந்து பொருந்தி, அருளோடுங்கூடி யானந்த நிருத்தத்தைப் பண்ணுவன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 34

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் என்றமையால்
சார்புணர்தல் தானே தியானமுமாம் – சார்பு
கெடவொழுகில் நல்ல சமாதியுமாம் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று.

பொழிப்புரை :

திருவருளை யுணர்ந்து திருவருள் நீக்கும்படிக்கு ஒழுகினாலென்று திருவள்ளுவர் உரைத்தப்படியினாலே (குறள் ஙருகூ), திருவருளை யுணருகிறதே தியானமுமாம்; திருவருள் நீங்கும்படிக்கு ஒழுகினால் அதுவே நல்ல சமாதியுமாம். இவை கைகூடினால் நாம் துன்பப்படும்படிக்கு வினை பாசம் நம்மை வந்து பொருந்துவதில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 35

அன்றிவரும் ஐம்புலனும் நீயும் அசையாதே
நின்றபடி யேநிற்க முன்னிற்கும் – சென்று
கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும்
ஒருமகள்தன் கேள்வன் உனக்கு.

பொழிப்புரை :

உனக்கு ஆவசியகமன்றி வரும் பஞ்சேந்தியங்களும் உன்னுடை ய போதமுஞ் சலனமில்லாமல் ஒருபடித்தாய் நிற்கவே சென்று நினைக்கிறதற்கு முன்னே அந்த நினைவழியும்படிக்குப் பொருந்தும் ஒப்பற்ற திருவருளுக்கு முதன்மையாகிய சிவன் உனக்கு முன்னிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 36

உண்டென்னில் உண்டாகும் இல்லாமை இல்லையெனில்
உண்டாகும் ஆனமையின் ஒன்றிரண்டாம் – உண்டில்லை
என்னு மவைதவிர்ந்த இன்பத்தை எய்தும்வகை
உன்னில்அவன் உன்னுடனே யாம்.

பொழிப்புரை :

அனுபவமுண்டென்னில் அனுபவிப்பானுமுண்டாகும், அது இல்லையெனில் அனுபவமுமில்லை; ஆகையால் ஒன்றென்றும் இரண்டென்றுஞ் சொல்லப்படும் உண்டில்லையென்னும் முறைமை தவிர்ந்த இன்பத்தைப் பொருந்தும் வகை விசாரிக்கில் கர்த்தா உன்னுடனே கூடி ஒன்றாயிருப்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 37

தூல உடம்பாய முப்பத்தோர் தத்துவமும்
மூல உடம்பாம் முதல்நான்கும் – மேலைச்
சிவமாம் பரிசினையுந் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த
பவமாம் பரிசறுப்பார் பார்.

பொழிப்புரை :

தூல சரீரமாகிய அசுத்த மாயையிலுண்டாகிய முப்பத்தொரு தத்துவமும் அதற்கு மூலசரீரமாகிய முதல் நான்கு தத்துவமும் அதற்கு மேலாகிய சிவதத்துவமும் இப்படியாகப்பட்ட முப்பத்தாறு தத்துவங்களினுடைய முறைமைகளையும் விசாரித்தறிந்தார் இதுவரையும் பொருந்தி வந்த பிறவியாகிற பேற்றை யறுப்பார்; இதை உண்மையாக அறிவாயாக. இதனுள். பிறவியறுத்தற்கு ஏது தத்தவ விசாரமென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 38

எத்தனையோ தத்துவங்கள் எவ்வெவர்கோட் பாடுடைய
அத்தனையும் சென்றங்(கு) அளவாதே – சித்தமெனும்
தூதுதனைப் போக்கிற்போய்த் தூக்கற்ற சோதிதனிற்
பாதிதனைக் கும்பிடலாம் பார்.

பொழிப்புரை :

தத்துவங்கள் எவ்வளவோ தெரியாது, ஒவ்வொரு தத்துவங்கள் எந்தெந்தக் கோட்பாட்டை யுடையதோ தெரியாது; அத்தனையும் பொருந்தி அளவிடாமற் சத்தாதிகளிடத்திலே தூது சொல்லுகிற உன்னுடைய போதத்தை விட்டாயானால், விசாரிப்பற்ற திருவருளிடத்திலே போய் அதற்குப் பாதியாயிருக்கிற சிவனைத் தெரிசிக்கலாம். அதை உண்மையாக அறிவாயாக.
இதனுள், தத்துவ விசாரத்திலே தானே முழுதும் நிற்க வேண்டாமென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 39

சாம்பொழுதும் ஏதும் சலமில்லை செத்தாற்போல்
ஆம்பொழுதி லேஅடைய ஆசையறில் – சோம்பிதற்குச்
சொல்லும் துணையாகும் சொல்லாத தூய்நெறிக்கட்
செல்லும் துணையாகும் சென்று.

பொழிப்புரை :

ஆன்மபோதம் ஆணவ மலத்தோடே கூடும்பொழுது ஆன்மாவுக்குச் சற்றும் விசாரமில்லை; அப்படி யொடுங்கினதுபோலக் கருவிகளுடனே கூடும்பொழுது நன்றாக ஆசையறவேணுமானால் அப்படி ஆசையறுதற்கு விருப்பு வெறுப்பற்றிருக்கிற சோம்பைத் துணையென்று ஆகமங்கள் சொல்லும். அதற்கு மாத்திரமோ துணை, உரையிறந்த மோட்சத்திலே செல்லுதற்குப் பொருந்தித் துணையாகும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 40

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின்அஃ தொன்றுமே வேண்டுவது – வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால்.

பொழிப்புரை :

வேண்டுமிடத்துப் பிறவாமையையே வேண்டவேணுமென்று திருவள்ளுவர் சொன்னபடியினாலே, வேண்டுமானால் அந்தப் பிறவாமையொன்றுமே வேண்டுவது; விரும்பாமையை விரும்ப விரும்பினது வருமென்றும் அவர் சொன்னபடியினாலே, நம்மை விரும்பின கர்த்தாவினிடத்திலே விரும்பாமையை விரும்பிக் கேட்பாயாக.
இதனுள், அவாவறுத்தலே பிறவாமைக்குக் காரணமென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 41

அரண உணர்வுதனில் அவ்வுணர்வை மாற்றில்
கரணமும் காலும்கை கூடும் – புரணமது
கூடாமை யுங்கூடுங் கூடுதலுங் கூட்டினுக்கு
வாடாமை யுங்கூடும் வந்து.

பொழிப்புரை :

அரணாகிய திருவருளினிடத்திலே நின்று ஆன்மபோதத்தை நீக்கில் தத்துவங்களும் பிராணவாயுவும் இவன் வசமாகக் கைகூடும். இதுவரையுங் கூடாதிருக்கிற பரிபூரணமான கர்த்தாவும் வந்து கூடுவன். அவன் கூடினவுடனே அவனுக்குக் கூடாகிய ஆன்மாவுக்கு வாடாமையுங் கூடும். (புரணம் பூரணம் ; பரிபூரணமான கர்த்தா.)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 42

இன்றிங் கசேதனமாம் இவ்வினைகள் ஓரிரண்டும்
சென்று தொடருமவன் சென்றிடத்தே – என்றுந்தான்
தீதுறுவன் ஆனால் சிவபதிதான் கைவிடுமோ
மாதொருகூ றல்லனோ மற்று.

பொழிப்புரை :

இப்பொழுது இவ்விடத்தில் சீவன்முத்தனானனவன் செய்யப்பட்ட சடமாகிய இவ்விருவினையும் அந்தமுத்தனெனப் பொருந்தின நேயத்ததிலே சென்று பொருந்தும்; எக்காலமுந் தன்னுடைய போதத்தையுந் தன்னையு மிழப்பாகக் கண்டவனானால் சிவனாகிய பதி கைவிடாமல் ஏற்றுக் கொள்ளுவன்; ஒன்றிலுந் தோய்வில்லாத கர்த்தா இவனோடு கலப்பானோவென்னில் திருவருளோடே கலந்திருக்கிறவனல்லவோ, ஆகையாற் கலப்பன். இதனுள் ஞானிக்கு வினையில்லையென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 43

அனாதி சிவனுடைமை யால்எவையும் ஆங்கே
அனாதியெனப் பெற்ற அணுவை – அனாதியே
ஆர்த்த துயரகல அம்பிகையோ(டு) எவ்விடத்தும்
காத்தல் அவன்கடனே காண்.

பொழிப்புரை :

எல்லா ஆன்மாக்களும் அனாதியே தொடுத்துச் சிவனுக்கு உடைமையாகையால் சிவனைப்போல அனாதித்தன்மை பெற்ற ஆன்மாவை அனாதியே பெந்தித்த மலமாயை கன்மமென்கிற துன்பம் நீங்கும்படிக்குத் திருவருளுடனே கூடிப் பெத்தத்திலும் முத்தியிலுங் காத்துக் கொள்ளுதல் சிவனுக்குக் கடனேயென்றறிவாயாக.
இதனுள், பெத்தத்திலும் முத்தியிலும் ஆன்மாவுக்குச் செயலில்லையென்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 44

தம்மிற் சிவலிங்கம் கண்டதனைத் தாம்வணங்கித்
தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் – தம்மையொரு
பூவாகப் பூவழியா மேகொடுத்துப் பூசித்தால்
ஓவாமை யன்றே யுளன்.

பொழிப்புரை :

தம்மிடத்திலே அருளாகிய சிவலிங்கத்தைக் கண்டு அந்தச் சிவலிங்கத்தைத் தாம் பணிந்து தம்முடைய பத்தியாகிய திருமஞ்சனத்தை அபிஷேகம் பண்ணித் தம்மை ஒப்பற்ற திருப்பள்ளித்தாமமாக்கித் தாமென்கிற முதலழியாமல் சாத்திப் பூசித்தால் அப்பொழுதே இடைவிடாமல் உன்னிடத்திலே நேயம் பொருந்தும்.
இதனுள் ஞானபூசை கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 45

தன்னைப் பெறுவதன்மேற் பேறில்லைத் தானென்றும்
தன்னைத்தான் பெற்றவன்தான் ஆரென்னில் – தன்னாலே
எல்லாந்தான் னுட்கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே
எல்லாமாய் நிற்கு மிவன்.

பொழிப்புரை :

பல பேறுகளுக்குள்ளேயுந் தன்னைப் பெறுதற்கு மேற்பட்ட பேறு ஒன்றுமில்லை; தன்னைப் பெற்றவன் ஆரென்னில் தன்னாலே எல்லாமாகிய திருவருளைத் தன்னிடத்திலே பெற்று முன்னே கொண் ட ஆன்மபோதத்தை விட்டு எக்காலமும் எவ்விடத்தும் வியாபித்து நிற்பன்; இப்படிப்பட்டவனே தன்னைப் பெற்றவன்.
இதனுள். இந்த நிலைமையை ஆன்மாவுக்குள்ள தன்னியல்பென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 46

துன்பமாம் எல்லாம் பரவசனாய்த் தான்துவளில்
இன்பமாம் தன்வசனாய்த் தானிருக்கில் – என்பதனால்
நின்வசனா யேயிருக்கில் நின்னுடனாம் நேரிழையாள்
தன்வசனா யேயிருப்பன் தான்.

பொழிப்புரை :

ஆன்மா மலமாயை கன்மங்கள் வசமாய்த் துவண்டானானால் இவனுக்கு வருகிறதெல்லாந் துன்பமேயல்லாமல் இன்பஞ் சற்றுமில்லை, தன்வசமாயிருந்தானானால் இவனுக்கு வருகிறதெல்லாம் இன்பமேயல்லாமல் துன்பஞ் சற்றுமில்லையென்று வேதாகமங்கள் சொல்லுகையால், நீ மலவசத்தனல்லாமல் உன்வசத்தனாயிருந்தாயானால் அருள் வசமாயிருக்கப்பட்ட கர்த்தா உன்னுடனே வந்து பொருந்துவன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 47

செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோ(டு)
ஒத்தாரே யோகபர ரானவர்கள் – எத்தாலும்
ஆராத அக்கரணத் தார்ப்புண்டிங் கல்லாதார்
பேராமற் செல்வர்அதன் பின்.

பொழிப்புரை :

கருவிகளை விடுகிறதே முத்தியென்னில் அவர்கள் அனுபவத்தை யிழந்தவர்களே; கருவிகளுடனே பொருந்தியிருக்கச் செய்தே அந்த நேயத்திலே பொருந்தியிருக்கிறவர்களே அத்துவிதத்திலே மேம்பட்டவர்; எந்தவிதத்தாலும் இவன் வசமாகப் பொருந்தாத கருவிகளினாலே கட்டப்பட்டு நேயத்திலே பொருந்தாதவர்கள் இடைவிடாமற் கருவிகளின் வழியே சென்று செனனமரண துக்கப்படுவர்.
இதனுள், பெத்தத்துக்கும் முத்திக்குங் கருத்து வேறுபாடல்லாமற் கருவியன்றென்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 48

கண்ணும் கருத்தும் கடந்ததொரு பேறேயும்
கண்ணும் கருத்தும் களிகூர – நண்ணி
வடம்அடக்கி நிற்கும் வடவிடத்தே போல
உடனடக்கி நிற்பர்கள்காண் உற்று.

பொழிப்புரை :

இந்திரியங்களுக்கும் அந்தக்கரணங்களுக்கும் அப்பாற்பட்ட பொருளானாலும் தங்கள் ஞானத்தாலும் சிவஞானத்தாலும் மகிழும்படிக்கு நேயத்தைப் பொருந்தி, ஆலமரத்தை யடக்கி நிற்கும் ஆலவித்துப் போல, சிவானுபவத்தைத் தங்களிடத்திலே யடக்கி நிற்பர்கள் ஞானவான்கள். இந்த உண்மையைச்சிவஞானத்தைப் பொருந்தி யறிவாயாக. இதனுள், சிவானுபவம் ஞானவான்களிடத்திலே யன்றி மற்றிடங்களிலே நில்லாதென்பது உவமையாற் கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 49

வானகமும் மண்ணகமு மாய்நிறைந்த வான்பொருளை
ஊனகத்தே உன்னுமதென் என்றனையேல் – ஏனகத்து
வாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம்
ஆதனமே அன்றோ அதற்கு.

பொழிப்புரை :

வானினிடத்தும் மண்ணினிடத்தும் வியாபித்திருக்கிற கர்த்தாவை ஏகதேசப்பட்டவனைப் போல ஊனாகிய சரீரத்திலே தியானிப்பானேன் என்பையாகில், அவன் வியாபித்திருக்கினும் சரீரத்திலே பெந்தித்திருக்கிற வாதனை நீக்கும்பொருட்டுத் தியானிக்க வேணும்; அதன்றியும் பிருதிவிமுதல் நாதமீறாகிய தத்துவங்கள் கர்த்தாவுக்கு ஆசனமல்லவோ, ஆகையாலுந் தியானிக்க வேணும்.
இதனுள், நேயத்தை யுள்ளபடி பெற்றிருந்தாலும் இடைவிடாமல் தியான சமாதிகளுடனே கூடியிருக்க வேணுமென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 50

கல்லில் கமரில் கதிர்வாளில் சாணையினில்
வல்லுப் பலகையினில் வாதனையைச் – சொல்லும்
அகமார்க்கத் தாலவர்கள் மாற்றினர்காண் ஐயா
சகமார்க்கத் தாலன்றே தான்.

பொழிப்புரை :

சீடனே, மலவாதனை கெடுகிற நீதியைச் சொல்லுமிடத்து, கல்லினிடத்தும் கமர் நிலத்தினிடத்தும் பிரகாசம் பொருந்திய வாளினிடத்தும் சந்தனச் சாணையினிடத்தும் பெலத்த பலகையினிடத்தும் திருக்குறிப்புத் தொண்டரும் அரிவாட்டாய நாயனாரும் கோட்புலி நாயனாரும் மூர்த்தி நாயனாரும் மூர்க்கநாயனாரும் சரீரத் தொண்டினாலே மலவாதனையைக் கெடுத்தார்கள், சகமார்க்கமாகிய யோக பாதத்தாலல்லவே. (கல் காலந்தவறியதால் திருக்குறிப்புத் தொண்டர் கல்லில் தலையை மோதிக்கொண்டார்; கமர் அரிவாட்டாயர் நிவேதனப் பொருள் கமர்நிலத்தே சிந்தியதனால் தம் கழுத்தை யரிந்தார்; வாள் சிவபூசைக்குரிய நெல்லையுண்ட சுற்றத்தாரைக் கோட்புலி வாளால் கொன்றார்; சாணை சந்தனக்கல்லில் மூர்த்தி தம் கையை அரைத்தார்; வல்லுப்பலகை சூதாட்டத்தாற் பொருள்பெற்று மூர்க்கர் அடியாரை வழிபட்டார்; வல்சூதாடு கருவி.)
இதனுள், யோகத்தைப் பெற்றிருந்தாலும் சரியை கிரியையாகிய திருத்தொண்டு செய்ய வேணுமென்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 51

உள்ளும் புறம்பும் நினைப்பொழியில் உன்னிடையே
வள்ளல் எழுந்தருளும் மாதினொடும் – தெள்ளி
அறிந்தொழிவா யன்றியே அன்புடையை யாயில்
செறிந்தொழிவாய் ஏதேனுஞ் செய்.

பொழிப்புரை :

நீ எங்கும் ஒருபடித்தாய் வியாபித்திருக்கையால் உள்ளென்றும் புறம்பென்றும் நினையாதிருந்தால் உன்னிடத்திலே திருவருளோடுங் கூடிச் சிவன் பொருந்துவன். நினையாமைக்கு உபாயமேதென்னில் ஞானசாத்திரங்கள் ஆராய்ந்தறிந்து நினைவை யொழிதலல்லாமலும் அன்புண்டானால் அறுபத்துமூவரைப் போலத் திருத்தொண்டிலே பொருந்தி நினைவை யொழி. இவையிரண்டுங் கூடாதென்றால் இயன்றமாத்திரஞ் சிவ பணிவிடைகளைச் செய்வாயாக.
இதனுள் ஆன்மா விகாரமற்றிருத்தற்கு மூவகை யுபாயஞ்சென்னது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 52

கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற்
கண்ணப்ப னொன்பதோ ரன்பதனைக் – கண்ணப்பர்
தாமறிதல் காளத்தி யாரறிதல் அல்லதுமற்(று)
யாமறியும் அன்பன் றது.

பொழிப்புரை :

கண்ணப்பருடைய அன்புபோல ஓரன்பு மில்லை யென்று மாணிக்கவாசக மூர்த்தி திருவுளம்பற்றின படியினாலே (கோத்தும்பிச), கண்ணப்பரன்பு போன்ற அன்பைக் கண்ணப்பநாயனாரறிதலுங் காளத்தியாரறிதலு மல்லாமல் நாமறியப்பட்ட அன்பல்ல அந்த அன்பு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 53

அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை
அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க – அவிழ்ந்தசடை
வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பில்
சேந்தனார் செய்த செயல்.

பொழிப்புரை :

நைந்து குழிந்த சீலையிலே நழுவக்கட்டி அருவருக்கத்தக்க சோற்றைப் பாவனைகழன்ற மனதினாலே யவிழ்க்கத்தக்கதாகத் தாழ்ந்த சடையினையுடைய சிவனுக்கு அந்தச் சோறு நல்லமுதாக இருந்தது. இது ஆருடைய செய்தியென்னின் மெய்யன்பினையுடைய சேந்தனார் செய்த செயல்.
இக்கதையை ஐதிகத்தாற் கேட்டறிக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 54

சுரந்த திருமுலைக்கே துய்யதிரு ஞானம்
சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் – சுரந்த
தனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த
மனமுடையாள் அன்பிருந்த வாறு.

பொழிப்புரை :

திருஞானசம்பந்தப் பிள்ளையார் கண்ணிலே நீர்சுரந்து பரமேசுவரியுடைய திருமுலையினிடத்திலே சுரந்த தூய்மையாயிருக்கிற திருஞானமாகிய பாலைக் குடித்தாரென்று அவரவரே சொல்லத்தக்கதாகப் பாவனை கழன்ற மனமுடையாளாகிய தென்பாண்டிமாதேவி யன்பிருந்தபடியினாலே பால் சுரந்த தனத்தையுடையவளானாள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 55

அன்பேயென் அன்பேயென் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் – அன்பன்றித்
தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்.

பொழிப்புரை :

சிவனை அன்பே என்னன்பே யென்று அன்பினாலேயழுது கூப்பிட்டு அந்தச் சிவனாகிய அன்பே தனக்கன்பாகத் தன்னுடைய போதங் கெடுகிறதே தனக்கன்பு. இதல்லாமல் தீர்த்தமாடுகிறதும் சிவார்ச்சனை முதலாகப் பல பணிகள் செய்கிறதும் அன்பாகிய மரம் வளருகிறதற்குச் சொல்லப்பட்ட வித்தல்லவோ.
இதனுள், சரியை கிரியா யோகங்களெல்லாம் அன்பு வருகிறதற்குக் காரணமென்பது கண்டு கொள்க. இந்நான்கு செய்யுளினும் அன்பின் இலக்ணங் கண்டுகொள்க

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 56

எல்லார் அறிவுகளின் தாற்பரியம் என்னறிவு
செல்லு மிடத்தளவும் சென்றறிந்தேன் – வல்லபடி
வாதனையை மாற்றும் வகையதுவே மற்றவற்றுள்
ஏதமறக் கண்ட திது.

பொழிப்புரை :

பன்னிரண்டு சமயத்தாருடைய அறிவுகளின் முடிவை என்னுடைய அறிவு செல்லுமிடமட்டும் யான் சென்று விசாரித்தறிந்தேன். அந்தச் சமயங்களுக்குள்ளே எந்த விதத்தினாலும் மல வாதனையை நீக்கிக் கொள்ளுகிற முறைமை யொன்றுமே குற்றமறக் கண்ட கொள்கை. மற்றக் கொள்கையெல்லாங் குற்றமுடையதாயிருக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 57

வித்தும்அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம்
வித்தும்அதன் அங்குரமும் மெய்யுணரில் – வித்ததனிற்
காணாமை யால்அதனைக் கைவிடுவர் கண்டவர்கள்
பேணாமை யால்அற்றார் பேறு.

பொழிப்புரை :

ஆன்மாக்களுக்கு மெய்ஞ்ஞானம் பிரவேசித்தவிடத்துச் சிவனும் ஆன்மாக்களும் எப்படியிருப்பார்களென்னில் வித்தும் வித்தினிடத்திலே அடங்கியிருக்கப்பட்ட அங்குரமும் போன்றிருப்பார்கள். வித்தையும் அங்குரத்தையும் விசாரிக்குமிடத்து வித்தினிடத்திலே அங்குரமென்றொரு முதல் காணாதபடியினாலே சிவனிடத்திலே தம்மை ஒருமுதலாகக் காணார்; தம்மை ஒரு முதலாகக் கண்டவர் சிவனைப் பேணாராகையாலே சிவானுபவத்தை இழந்தவர்கள்.
இதனுள், நேயத்திலே தான் பொருந்தியிருந்தாலும் தானென்றொரு முதலாகாமலிருக்க வேணுமென்பது உவமையாற் கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 58

ஒன்றன்(று) இரண்டன்(று) உளதன்(று) இலதன்று
நன்றன்று தீதன்று நானென்று – நின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று
தலையன்(று) அடியன்று தான்.

பொழிப்புரை :

சிவனும் ஆன்மாவுங் கூடி நிற்கிற நிலைமை எப்படி யென்னில் ஒன்றுமல்ல இரண்டுமல்ல உள்ளதுமல்ல இல்லதுமல்ல நன்றுமல்ல தீதுமல்ல ஆன்மாவென்று சொல்லிநின்ற நிலையுமல்ல சிவனுமல்ல சிவஞானமுமல்ல ஆதியுமல்ல அந்தமுமல்ல.
இந்த வகையெல்லாம் அல்லவென்றால் நாசமோ வென்னில் உரைக்கப்படா (த) தென்றது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 59

செய்யாச் செயலைஅவன் செய்யாமற் செய்ததனைச்
செய்யாச் செயலிற் செலுத்தினால் - எய்யாதே
மாணவக அப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும்
ஆணவமும் அற்றால் அறி.

பொழிப்புரை :

ஒருவராலுஞ் செய்யாத செயலைச் சிவன் செய்யாமல் நீயாகச் செய்து சாதித்துப் பின்பு அந்தச் செயலை நீ செய்யாத செயலினாலே சிவனிடத்திலே செலுத்தினால் அப்பொழுதே ஆசையை வளர்க்கும் ஆணவமலம் அறும். அற்றால் சீடனே இடை விடாமற் சிவானுபவத்தை அறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 60

ஏதேனும் காலமுமாம் ஏதேனும் தேசமுமாம்
ஏதேனும் திக்கா சனமுமாம் – ஏதேனும்
செய்தா லொருவலுமாம் செய்யாச் செயலதனைச்
செய்யாமற் செய்யும் பொழுது.

பொழிப்புரை :

ஒருவராலுஞ் செய்யப்படாத செயலைத்தான் செய்யாமற் செய்தானாயில் அவனுக்கு எந்தக் காலமுமாம் எந்தத் தேசமுமாம் எந்தத் திக்குமாம் எந்த ஆசனமுமாம் எந்தத் தொழிலைச் செய்தாலும் விடுதலுமாம். இந்த முறைமை பெத்தரிடத் துண்டாகிற் பதிதராவரென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 61

செய்தற் கரிய செயல்பலவுஞ் செய்துசிலர்
எய்தற் கரியதனை எய்தினர்கள் – ஐயோநாம்
செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு.

பொழிப்புரை :

ஆன்மபோதத்தால் செய்தற்கரிய செயல்கள் பல வற்றையுஞ் செய்து திருநீலகண்டக் குயவனார் முதலாகிய சில நாயன்மார் பெறுதற்குரிய பேற்றைப் பெற்றார்கள். சீடனே, நாம் அவர்களைப்போலே ஆன்ம போதத்தால் செய்யாமற் செய்து வினையை யறுக்கலாயிருக்க நாம் செய்யாதிருத்தலாகாத முறைமை.
இப்படியன்றி, அறுபத்துமூவர் செயல் செய்து பெற்றார்கள், நாம் செயல் செய்யாமற் பெறலாமென்று பொருள் கூறில், அறுபத்து மூவருக்கும் அறிவில்லையென்று பொருள்படுமாகையால் அது பொருளன்மை யுணர்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 62

இப்பொருள்கள் யாதேனும் ஏதெனினும் ஒன்றுசெய்தல்
எப்பொருளும் செய்யா தொழிந்திருத்தல் - மெய்ப்பொருளைக்
கண்டிருத்தல்செய்யாதே கண்ட மனிதரெலாம்
உண்டிருப்ப தென்னா உரை.

பொழிப்புரை :

உலகத்திலே காணப்பட்ட மனிதரெல்லாந் தமக்குள்ள பதார்த்தங்களுக்குள்ளே எந்தப் பதார்த்தமானாலும் அதிலே சிறிதானாலும் ஒருபொழுதானாலும் குருலிங்க சங்கமத்துக்குச் செய்தல் ஒரு பதார்த்தமுந் தான் தேடாமல் துறந்திருத்தல் சிவனைக் கண்டிருத்தல் இவை மூன்றும் செய்யாதே, உண்டு சரீரத்தைப் பேணி வாழ்ந்திருக்கிறது ஏது காரிய நிமித்தமோ சொல்லுவாயாக மாணாக்கனே.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 63

வீட்டிலே சென்று வினையொழித்து நின்றிடினும்
நாட்டிலே நல்வினைகள் செய்திடினும் – கூட்டில்வாள்
சாத்தியே நின்றிலையேல் தக்கனார் வேள்விசெய்த
மாத்திரமே யாங்கண்டாய் வந்து.

பொழிப்புரை :

துறவறத்திலே சென்று தீவினைகளை யொழித்து நின்றாலும் நாட்டிலே வந்து பொருந்தி நல்வினைகளைச் செய்தாலுங் கூடாகிய சிவனிடங்களாகிய உன்னை யடக்காதேபோனால் அந்தக் கிரியைகளெல்லாம் தக்கன் செய்த வேள்வி தீவினையாவதுபோலத் தீவினையா மென்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 64

சிவன்முதலே அன்றி முதலில்லை என்றும்
சிவனுடைய தென்னறிவ தென்றும் - சிவனவன(து)
என்செயல தாகின்ற தென்றும் இவையிற்றைத்
தன்செயலாக் கொள்ளாமை தான்.

பொழிப்புரை :

சிவனுடைய இச்சையன்றி நமக்கிச்சை யில்லையென்றும் சிவனுடைய அறிவன்றி நமக்கறிவில்லை யென்றும் சிவனுடைய கிரியையன்றி நமக்குக் கிரியையில்லையென்றும் இவைகளைத் தன்னுடைய செய்தியாகக் கொள்ளாமையே சீவன் முத்தித்தன்மை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 65

இன்(று) இச் சமயத்தின் அல்லதுமற் றேழையுடன்
ஒன்றுசொலி மன்றத்து நின்றவரார் – இன்றிங்கே
அங்கம் உயிர்பெறவே பாடும் அடியவர்கள்
எங்குமிலை கண்டாய் இது.

பொழிப்புரை :

இந்தக் கலியுகத்துக்குள்ளே சைவசமயத்தி லல்லது திருவம்பலத்திலே ஊமைப் பெண்ணைப் பேசுவித்து அவளுடனே வார்த்தை சொல்லிநின்ற பேருண்டோ, அல்லாமலும் இந்தப் பூமியிலே எலும்பு உயிர் பெறும்படிக்குத் தமிழ் பாடினவர்கள் எந்தச் சமயத்திலுமில்லை. இந்த உண்மை அறிவாயாக. இதனுள் சைவசமயமே சிறப்பென்பது கண்கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 66

ஆதனமும் ஆதனியு மாய்நிறைந்து நின்றவனைச்
சேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் – சேதனனைச்
சேதனனி லேசெலுத்திச் சிற்பரத்த ராய்இருப்பர்
ஏதமறக் கண்டவர்கள் இன்று.

பொழிப்புரை :

ஆதனமாகிய ஆன்மாவும் ஆதனியாகிய தானுமாய் வியாபித்து நின்ற கர்த்தாவாகிய எல்லா ஞானமுடையவனாலே நன்றாய்த் தெளிந்து ஆன்மாவைச் சிவனிடத்திலே பொருத்தி மேலாகிய சிவனாயிருப்பார் ஆரென்னில் இப்போது திரிபதார்த்தங்களைக் குற்றமறத் தெரிசித்தவர்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 67

விரிந்தும் குவிந்தும் விழுங்குவர்கள் மீண்டும்
தெரிந்தும் தெரியாது நிற்பர் – தெரிந்தும்
தெரியாது நிற்கின்ற சேயிழைபால் என்றும்
பிரியாது நின்றவனைப் பெற்று.

பொழிப்புரை :

வியாபித்து நின்றுஞ் சரீரத்திலே நின்றுங் கர்த்தாவை யுள்ளடக்கிக்கொண்டு நிற்பர், அல்லாமலும் விடயங்களை யறிந்து மறியாதிருப்பர், பிரபஞ்சத்தை யறிந்தும் விகாரமற்றிருக்கிற திருவருளைப்பிரியாத சிவனைப் பெற்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 68

தாமடங்க இந்தக் தலமடங்குந் தாபதர்கள்
தாமுணரில் இந்தத் தலமுணரும் – தாமுனியில்
பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும்
நாமடந்தை நில்லாள் நயந்து.

பொழிப்புரை :

ஞானவான்கள் இந்திரியங்களை யடக்கினார்களானால் இப் பூமியிலுள்ள பக்குவான்மாக்களும் அப்படி யடங்குவார்கள். தாம் ஏதொரு பொருளை விசாரித்தார்களானால் பக்குவரும் அப்பொருளை விசாரிப்பார்கள். தாம் வெறுத்தார்களானால் செல்வமும் புகழுங் கலை ஞானமும் விரும்பி நில்லாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 69

துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் – துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும்
ஆக்கியிடும் அன்பர்க் கவன்.

பொழிப்புரை :

நின்மல துரியத்தைக் கடந்த திருவருளோடே கூடி யிருக்கிக்கிற கர்த்தா தன்னையடைந்த அன்பர்க்குச் சாக்கிரத்திலே துரியத்தைக் கொடுத்துத் தன்னுடைய கிருத்தியங்களையுங் கொடுப்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 70

ஓடம் சிவிகை உலவாக் கிழியடைக்கப்
பாடல் பனைதாளம் பாலைநெய்தல் - ஏடெதிர்வெப்(பு)
என்புக் குயிர்கொடுத்தல் ஈங்கிவைகாண்
ஓங்குபுகழ்த் தென்புகலி வேந்தன் செயல்.

பொழிப்புரை :

ஓடங் கரையேற்றுதல் முத்துச் சிவிகையேறுதல் உலவாக்கிழி பெறுதல் திருமறைக்காட்டில் கதவடைத்தல் ஆண்பனையைப் பெண்பனையாக்குதல் பொற்றாளம் பெறுதல் பாலை நிலத்தை நெய்தல் நிலமாக்குதல் ஆற்றில் ஏடு எதிரேறப் பண்ணுதல் பாண்டியனுக்கு வெப்புத் தவிர்த்தல் எலும்புக்குயிர் கொடுத்தல் இந்தக் கிரியைகளெல்லாம் மிகுந்த புகழையுடைய சம்பந்தப் பிள்ளையார் செய்தி. ஏடெரி என்றும் பாடம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 71

கொல்கரியின் நீற்றறையின் நஞ்சிற் கொலைதவிர்த்தல்
கல்லே மிதப்பாய்க் கடல் நீந்தல் – நல்ல
மருவார் மறைக்காட்டில் வாசல்திறப் பித்தல்
திருவாகீ சன்றன் செயல்.

பொழிப்புரை :

யானையினாலேயும் நீற்றறையினாலேயும் நஞ்சினாலேயும் உண்டான கொலையை நீக்குதல் கல்லுத் தெப்பமாகக் கடலை நீந்துதல் வாசனை கமழப்பட்ட திருமறைக்காட்டிலே வாசலைத் திறப்பித்தல் இவையெல்லாந் திருநாவுக்கரசருடைய செய்தி.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 72

மோகம் அறுத்திடின்நாம் முத்தி கொடுப்பதென
ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் – தோகையர்பால்
தூதாகப் போகவிடும் வன்றொண்டன் தொண்டுதனை
ஏதாகச் சொல்வே னியான்.

பொழிப்புரை :

ஆசையற்றால் நாம் மோட்சங் கொடுப்போமென்று ஆகமங்கள்தோறுஞ் சொன்ன கர்ர்தாவைப் பெண்களிடத்தில் தூதாளாக அனுப்பின சுந்தரமுர்த்தி தொண்டினை நான் நன்றென்று சொல்வேனோ தீதென்று சொல்வேனோ.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 73

பாய்பரியொன்(று) அந்தப் பரமானந்தப் பரனைத்
தூயதிரு வாய்மலராற் சொற்செய்து – மாயக்
கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய்
திருவாத வூராளுந் தேன்.

பொழிப்புரை :

பரமேசுவரன் கொடுக்கப்பட்ட மேலாகிய ஆனந்தமாகிய பிரயோசனத்தைத் தூய தாமரைமலர் போன்ற திருவாக்கினாலே செய்யுளாக்கி மாயமாகிய கருக்குழித்துன்பத்தை நாமறியாதபடிக்கு அனுக்கிரகம் பண்ணினான் காண் தேன்போன்ற மாணிக்க வாசகன். இவை நான்கு செய்யுளினும் ஞானவான்களுடைய மகத்துவங் கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 74

அம்மையிலும் இம்மையிலும் அச்சந் தவிர்த்தடியார்
எண்மையுமாய் எங்கும் இயங்குதலான் – மெய்ம்மைச்
சிவயோக மேயோகம் அல்லாத யோகம்
அவயோக மென்றே அறி.

பொழிப்புரை :

பரமுத்தியினிடத்திலுஞ் சீவன்முத்தியினிடத்திலும் உண்டான அச்சங்களையுந் தீர்த்துச் சிவனடியாருக் கடிமையுமாய் எங்கும் வியாபித்திருக்கையால் உண்மையாகிய சிவனோடே பொருந்துதலே நல்ல பொருத்தம். இல்லாத கன்மயோகங்க ளெல்லாம் அவயோக மென்றிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 75

மன்னன்அருள் எவ்வண்ணம் மானிடர்பால் மாணவக
அன்ன வகையே அரனருளும் – என்னில்
அடியவரே எல்லாரும் ஆங்கவர்தாம் ஒப்பில்
அடியவரே எல்லாம் அறி.

பொழிப்புரை :

(மாணவனே) மனிதரிடத்திலே நன்மை தீமைகளையறிந்து (மன்னன் அருள் செய்யுமாறுபோலக்) கர்த்தாவுங் கிருபை பண்ணுவன். அப்படி உவமை சொன்னாலுஞ் சர்வான்மாக்களுங் கர்த்தாவுக்கே யடிமை. அப்படியானாலுங் கர்த்தாத் திருமேனி கொண்டு நம்மைப் போல்வரானாற் பெத்தர் நீங்கலாக முத்தான்மாக்களே யடிமை யென்றறிவாயாக. இதனுள், சிவன் பெத்தருக்கு அருவமாயும் முத்தருக்கு உருவமாயும் இருப்பனென்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 76

உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம்
அடங்கத்தம் பேரின்பத் தாக்கில் – தொடங்கி
முளைப்பதுமொன் றில்லை முடிவதுமொன் றில்லை
இளைப்பதுமொன் றில்லை இவர்.

பொழிப்புரை :

உடம்புடனே கூடின சீவன்முத்தர்கள் தங்களிடத்திலே பொருந்தின விஷயமடங்கலையுந் தமக்குப் பேரின்பமாகிய சிவனிடத்திலே கொடுத்தலினாலே, அவர்கள் ஆகாமியத்திலே பொருந்தி மேற்சரீர மெடுப்பதுமில்லை ஆணவமலத்திலே யொடுங்குகிறதுமில்லை தத்துவச் சேட்டைகளிலே யிளைக்கிறதுமில்லை. ஒன்றென்பது சற்றென்னும் பொருள்பட நின்றது. இதனுள், பரமுத்தித்தன்மை சீவன்முத்தியிலே பெறுவர்களென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 77

பேரின்ப மான பிரமக் கிழத்தியுடன்
ஓரின்பத் துள்ளானை உள்ளபடி – பேரின்பம்
கண்டவரே கண்டார் கடலுயிர்த்த இன்னமுதம்
உண்டவரே உண்டார் சுவை.

பொழிப்புரை :

பாற்கடலிலே யுதிக்கப்பட்ட அமுதத்தை யுண்டவர்களே அதனுடைய சுவையை யறிந்தவர்கள். அதுபோல, இன்பமான சத்தியுடனேகூடி ஒப்பற்ற இன்பத்தையுடைய சிவனை உள்ளபடி தெரிசித்தவர்களே பேரின்பத்தை யடைந்தவர்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 78

நங்கையினான் நாமனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும்
நங்கையினாற் செய்தளிக்கும் நாயகனும் – நங்கையினும்
நம்பியாய்த் தான்நடுவே நாட்டப் பெறுமிதுகாண்
எம்பெருமா னார்தம் இயல்பு.

பொழிப்புரை :

நம்முடைய கையினாலே நாம் எல்லாத் தொழிலையுஞ் செய்தாற்போல. ஆறத்துவாவையுஞ் சத்தியினாலே யுண்டாக்கப்பட்ட சிவனும் அந்தச் சத்திக்கு நடுவே யிருப்பனென்று நாட்டப்படுவன். எம்முடைய கர்த்தாவினியல்பு இப்படி.
சிவன் கிருத்தியம் பண்ணானென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 79

பொன்னிறம் கட்டியினும் பூணினும் நின்றாற்போல்
அந்நிற அண்ணலும் அம்பிகையும் – செந்நிறத்தள்
எந்நிறத்த ளாயிருப்பள் எங்கள் சிவபதியும்
அந்நிறத்த னாயிருப்பன் ஆங்கு.

பொழிப்புரை :

பொன்னிறம் போன்ற கர்த்தாவுஞ் சத்தியும் எப்படியிருப்பார்களென்னில், பொன்னிறம் பொற்கட்டியிடத்தும் பொற்பூணினிடத்தும் ஒரு தன்மையா நின்றதுபோல சிவந்த நிறத்தையுடைய சக்தி எவ்வண்ணமாயிருந்தாலும் எம்முடைய கர்த்தாவாகிய சிவன் அந்த இடங்கள் தோறும் அவ்வண்ணமாகவே இருப்பன். திருவருளாகிய சத்தியையன்றிச் சிவனாகிய கர்த்தாவுமில்லையென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 80

தாரத்தோ டொன்றாவர் தாரத்தோர் கூறாவர்
தாரத்தோ டெங்குந் தலைநிற்பர் – தாரத்தின்
நாதாந்தத் தேயிருப்பர் நற்றானத் தேயிருப்பர்
வேதாந்தத் தேயிருப்பர் வேறு.

பொழிப்புரை :

சிவன் சக்தியோடே ஒன்றாக இருப்பன், சத்திக்கு ஒருகூறாக இருப்பன், சத்தியோடே ஆறத்துவாவிலும் வியாபித்து நிற்பன், சத்தியினாலே இன்பத்தின் முடிவிலே யிருப்பன், நல்ல தானமாகிய ஆன்மாவிடத்திலே யிருப்பன், வேதத்தின் முடிவிலே யிருப்பன். இப்படியிருப்பினும் அவற்றுக்கெல்லாம் வேறுமாயிருப்பன்.
எண்ணிறந்த லீலையையுடைய னென்பது. இவை மூன்று செய்யுளினும் பஞ்கிருத்தியம் நடத்து முறைமை கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 81

ஒன்றுரைத்த தொன்றுரையாச் சாத்திரங்கள் ஒன்றாக
நின்றுரைத்து நிச்சயிக்க மாட்டாவால் – இன்றுரைக்க
என்னால் இயன்றிடுமோ என்போல்வார் ஏதேனும்
சொன்னால்தான் ஏறுமோ சொல்.

பொழிப்புரை :

ஒரு நூல் சொல்லப்பட்ட பொருளை ஒரு நூல் சொல்லாது; சாத்திரங்கள் பலவும் நியமமாகப் பூமியின்கண்ணே நின்று இது பொருளென்று நிச்சயித்துச் சொல்லமாட்டா; ஆகையால் என்னாலே இது பொருளென்று சொல்லப்படுமோ, படாது. என்னைப் போன்றவர்களாய் யாதானுமோர் சொல்லைச் சொன்னார்களாயினும் அந்தச் சொற்பொருளினாலே சொல்லுமோ சொல்லாதோ, இதற்கு உத்தரமுண்டாகிற் சொல்லுவாயாக.
இதனுள், சாத்திரங்களாலே கர்த்தாவை யறியப்படாதென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 82

யாதேனும் காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும்
யாதேயும் பாகன் இலச்சினையே – ஆதலினால்
பேதமே செய்வாய் அபேதமே செய்திடுவாய்
பேதாபே தஞ்செய்வாய் பின்.

பொழிப்புரை :

எல்லா வுலகங்களினும் எந்த ஏதுவிலேயானாலும் நடக்கிற கிரியைகளெல்லாம் எல்லாவிடங்களிலும் பொருந்தியிருக்கிற கர்த்தாவினுடைய ஆக்கினையே யாகையால் சடசித்துக்களிரண்டுக்குஞ் செய்தியில்லை. இத்தன்மையறிந்து பின்பு சிவனைப் பேதமாக்கித் தியானத்தைச் செய். அதுவன்றியும் ஐக்கியமாக்கி அவையன்றியும் நீக்கம் ஐக்கியம் இரண்டுமாக நிற்பாய். நீ இவை மூன்றிலே ஒன்றனைச் செய்வாயாக. நீ சுட்டற்று நிற்கவே நிலைமை கூடுமென்பது கருத்து

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 83

நின்றபடி நின்றவர்கட் கன்றி நிறந்தெரியான்
மன்றினுள்நின் றாடல் மகிழ்ந்தானும் – சென்றுடனே
எண்ணுறும்ஐம் பூதமுதல் எட்டுருவாய் நின்றானும்
பெண்ணுறநின் றாடும்பிரான்.

பொழிப்புரை :

அருட்சக்தியோடுகூடி ஊனக்கூத்து ஞானக்கூத்து நடிக்கப்பட்ட கர்த்தா ஞானாசாரியன் கற்பித்த நிலையிலே நின்றவர்களுக்கல்லாமல் நிலை தப்பினவர்களுக்கு வெளிப்படான். திருவம்பலத்திலே நிருத்தத்தைப் பண்ணினவனும் எண்ணப்பட்ட பஞ்சபூத முதலாக அட்டமூர்த்தமாகப் பொருந்தி அவையிற்றிலே வியாபித்து நின்றானும் அந்தக் கர்த்தாவே. காணப்பட்ட ரூபங்களெல்லாம் கர்த்தாவின் வடிவே யென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 84

சிவமே சிவமாக யான்நினைந்தாற் போலச்
சிவமாகி யேயிருத்த லன்றிச் - சிவமென்(று)
உணர்வாரும் அங்கே உணர்வழியச் சென்று
புணர்வாரு முண்டோ புவி.

பொழிப்புரை :

பெத்தத்திலே ஆன்மபோதஞ் சீவித்தாற்போலச் சிவ மொன்றுமே பொருளாக அந்தப் பொருளாகியே யிருத்தலல்லாமல் சிவமென்றொரு பொருளைப் பாவிக்கிறவர்களும் ஆன்மபோதங்கெடப் பொருளிலே சென்று பொருந்துகிறவர்களும் பூமியின் கண்ணேயுண்டோ. இவையிரண்டுங் கேவலசகலச் குற்றமென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 85

அதுவிது வென்றும் அவன்நானே யென்றும்
அதுநீயே யாகின்றா யென்றும் – அதுவானேன்
என்றும் தமையுணர்ந்தார் எல்லாம் இரண்டாக
ஒன்றாகச் சொல்லுவரோ உற்று.

பொழிப்புரை :

அதுவென்றும் இதுவென்றும் அவனென்றும் நானென்றும் அது நீ யாகின்றாயென்றும் அது நானாகின்றேனென்றும் இப்படி இரண்டாயிருக்கவும், ஆன்மதெரிசனைப்பட்ட பெரியோர்களெல்லாம் மனம்பொருந்தி ஒன்றென்று சொல்லுவார்களோ, சொல்லார்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 86

ஈறாகி அங்கே முதலொன்றாய் ஈங்கிரண்டாய்
மாறாத எண்வகையாய் மற்றிவற்றின் – வேறாய்
உடனாய் இருக்கும் உருவுடைமை யென்றுங்
கடனா யிருக்கிறான் காண்.

பொழிப்புரை :

சங்கார காலத்திலே நிட்களமாயும் சிருட்டி காலத்திலே நிட்களசகளமாயும் அட்டமூர்த்தியாயும் இவற்றுக்கெல்லாம் வேறாயும் இவற்றுக்கெல்லாம் உடனாயும் இருக்கின்ற அருள்வடிவுடைமையைக் கர்த்தா எக்காலமும் முறைமையாகக் கொண்டிருப்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 87

உன்னுதரத் தேகிடந்த கீடம் உறுவதெல்லாம்
உன்னுடைய தென்னாய்நீ உற்றனையோ – மன்னுயிர்கள்
அவ்வகையே காண்இங் கழிவதுவும் ஆவதுவும்
செவ்வகையே நின்றசிவன் பால்.

பொழிப்புரை :

உன் வயிற்றிலே பிறந்த புழுக்கள் சுகந் துக்கமெல்லாம் உன்னுடைய சுகதுக்கமென்றுஞ் சொல்லாய்; அந்தச் சுகதுக்கத்தை நீ பொருந்தினவனுமல்ல; செவ்வையாக வியாபித்து நின்ற சிவனிடத்திலே நிலைபெற்ற உயிர்கள் பிறப்பதும் இறப்பதுஞ் சுகதுக்கப்படுவதும் இப்படிப்போல.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 88

அவனே அவனிமுத லாகிநின் றானும்
அவனே அறிவாகி னானும் – அவனேகாண்
ஆணாகிப் பெண்ணாய் அலியாகி நின்றானும்
காணாமல் நின்றானுங் கண்டு.

பொழிப்புரை :

கர்த்தாப் பிருதிவி முதலாகிய தத்துவங்களாயிருந்தாலும் ஆன்மாவினுடைய இச்சா ஞானக் கிரியைகளா யிருந்தாலும் ஆண் பெண் அலியாயிருந்தாலும் நீ அவனைக் காணாதபடிக்கு உன்னை அவன் கண்டு நிற்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 89

இன்றுதான் நீயென்னைக் கண்டிருந்தே கண்டாயோ
அன்றித்தான் நானுன்னைக் கண்டேனோ – என்றால்
அருமாயை ஈன்றவள்தன் பங்கனையார் காண்பார்
பெருமாயைச் சூழல் பிழைத்து.

பொழிப்புரை :

சீடனே, இப்போது நீ உன்னைக் கண்டு பின் என்னைக் கண்டாயோ அல்லது நான் என்னைக் கண்டு பின்பு உன்னைக் கண்டேனோ என்று சொல்லுவாயானால் அரிய திரோதான சத்தியை யீன்ற பராசத்தியையுடைய பாகனை யார் காணப்போகிறார், பெரிய மாயையாலே மறைக்கத்தக்க மறைப்பையெல்லாந் தப்பி.
கர்த்தா காண்பிக்க ஆன்மா காண்பான் என்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 90

கடல்அலைக்கே ஆடுதற்குக் கைவந்து நின்றுங்
கடலளக்க வாராதாற் போலப் – படியில்
அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம்
கருத்துக்குச் சேயனாய்க் காண்.

பொழிப்புரை :

கடலானது அலையினாலே ஒருவன் முழுகுகிறதற்கு அளவுபட்டு நின்றாலும் அக்கடல் அளவைக் கடங்காதாற்போல, பூமியின் கண்ணே பத்தி பண்ணின அடியாருக்குக் கர்த்தா கிருபை பண்ணுகிறதும் அவர்கள் அளவைக் கடங்காதவனாய்க் கிருபை பண்ணுவன். கர்த்தா முத்தியிலும் அளவுபடான் என்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 91

சிவனெனவே தேறினன்யான் என்றமையால் இன்றும்
சிவன்அவனி வந்தபடி செப்பில் – அவனிதனில்
உப்பெனவே கூர்மை உருச்செய்யக் கண்டமையால்
அப்படியே கண்டாய் அவன்.

பொழிப்புரை :

மாணிக்கவாசகமூர்த்தி சிவனெனவே தேறினன் யான் என்று ஆசாரியமூர்த்தத்தைச் சிறப்பித்துத் திருவுளம் பற்றினபடியினாலே (அண்டப்பகுதி வரி சாஉ), இப்போது சிவன் ஆசாரிய மூர்த்தமாகப் பூமியின் கண்ணே எழுந்தருளின முறைமையைச் சொல்லில் உப்பானது கூர்த்தற் சுவையாகிய அருவப் பொருளென்று பெயர்பெற்று உருவமாய் வந்ததுபோலக் காணப்படாத கர்த்தாவுமாகிறாரென்று பெயர்பெற்றுக் காணப்பட்டு வருவன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 92

அவனிவனாய் நின்ற(து) அவனருளால் அல்ல(து)
எவனவனாய் நிற்கின்ற தேழாய் – அவனிதனில்
தோன்றுமரப் புல்லூரி தொல்லுலகில் அம்மரமாய்
ஈன்றிடுமோ சொல்லாய் இது.

பொழிப்புரை :

ஆன்மா சிவமாய் நிற்கிறது சிவன் கிருபையினாலேயல்லாமல் வேறே எந்த ஏதுவினாலே நிற்கும், மாணாக்கனே, சொல்லுவாயாக. அன்றியும் மாமரத்திலே புல்லூரி முளைத்தால் அது மாமரத்தின் பழத்தைப் பழுக்க மாட்டாதது போல ஆன்மாகளுஞ் சிவனை யடைந்தால் பிற ஆன்மாக்களுக்கு இன்பங் கொடுக்க மாட்டார்கள்.
இதனுள், ஆன்மா தன் முயற்சியினாலே சிவானுபவந் தேட மாட்டான் என்பதும் ஆன்மாக்களுக்குச் சிவானுபவங் கொடுக்க மாட்டானென்பதுங் கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 93

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்(து)
அத்தி பழுத்த தருளென்னுங் – கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம்பழுக்கும்
ஏகக் கொடியெழுங்காண் இன்று.

பொழிப்புரை :

முத்தியைப் பெறுவதற்கு முதலாகிய ஆன்மா வென்னுங் கொடியிலே அனாதியே மறைக்கத்தக்க பாசமென்னுங் கொடி தழைத்து வளர்ந்து அத்திமரம்போல மிகுதியாகப் பழுத்தது. ஞானசத்தியாகிய திருவருளென்னுங் கத்தியினாலே அந்தப் பாசமென்னுங் கொடியின் வேரை யறுக்க அது சோர்ந்தொழிந்து, ஆன்மாவினிடத்திலே சிவானந்தக் கனி மேன்மேலும் பழுக்கும். சிவமென்றும் ஆன்மா வென்றும் இரண்டல்லாத ஒரு நீர்மையான கொடி அப்பொழுதே தோன்றாநிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 94

அகளத்தில் ஆனந்தத் தானந்தி யாயே
சகளத்தில் தையலுடன் தோன்றி – நிகளத்தைப்
போக்குவதுஞ் செய்தான்தன் பொன்னடியென் புன்தலைமேல்
ஆக்குவதும் செய்தான் அவன்.

பொழிப்புரை :

அகளத்திலே ஆனந்தமாகிய கர்த்தா சகளத்திலே (திருமேனியு) டையவர்களைப் போலக் கிருபையோடுங்கூடி ஆசாரிய மூர்த்தமாக வெளிப்பட்டு மலமாயா கன்மங்களைப் போக்கினான், தனது திருவடியை என் தலை மேலேயும் வைத்தான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 95

குற்றமறுத் தென்னையாட் கொண்டருளித் தொண்டனேன்
உற்ற தியானத் துடனுறைவர் – முற்றவரின்
மாட்சியுமாய் நிற்பரியான் மற்றொன்றைக் கண்டிடின்அக்
காட்சியுமாய் நிற்பார் கலந்து.

பொழிப்புரை :

ஆசாரியன் என்னைப் பொருந்தின மூன்று மலங்களையும் அறுத்து என்னையும் அடிமையாகக் கொண்டு நான் நினைத்த தியானத்துடனே என்னிதயத்திலே பொருந்துவன்; (இந்த நிலை முதிர வருகின்ற நேயத்திலே தான் பேரின்பமாய் நிற்பன்;) இது வன்றியும் நான் விடயங்களைப் பற்றினால் அந்த விடயமாய் நிற்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 96

ஆளுடையான் எந்தரமும் ஆளுடையா னேஅறியும்
தாளுடையான் தொண்டர் தலைக்காவல் – நாளும்
திருவியலூர் ஆளுஞ் சிவயோகி இன்றென்
வருவிசையை மாற்றினான் வந்து.

பொழிப்புரை :

பக்குவான்மாக்களை யாளப்பட்டவன் என்னைப் போன்ற அசத்தியரையும் (=அசக்தரையும்) ஆளப்பட்டவனே. நானறிதற்கேதுவாகியிருக்கப்பட்ட தாளாகிய திருவருளையுடையவன், எக்காலமும் அடியார்க்கெல்லாம் மேம்பட்ட காவலாளன், திருவியலூரிலே எழுந்தருளியிருக்கப்பட்ட சிவயோகி போன்றவன் இப்போது என்முன்னே வந்து நான் தத்துவங்கள் தோறுந் திரிகிற விசையை மாற்றினான். (திருவியலூர் உய்யவந்ததேவ நாயனர் திருவுந்தியார் செய்தவர். அவர் மாணாக்கராகிய ஆளுடையதேவ நாயனார் இந்நூலாசிரியருக்கு ஆசிரியர்.)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 97

தூலத் தடுத்த பளிங்கின் துளக்கமெனத்
தூலத்தே நின்று துளங்காமல் – காலத்தால்
தாளைத்தந் தென்பிறவித் தாளை அறவிழித்தார்க்
காளன்றி யென்மா றதற்கு.

பொழிப்புரை :

தூலமாகிய பஞ்சவன்னங்களை யடுத்த படிகத்தினுடைய சலனம்போலத் தூலமாகிய தத்துவங்கள் தோறுஞ் சென்று நான் சலனப்படாமல் (இருவினை யொப்பும் மலபரிபாகமும் உண்டான காலத்து) தனது தாளாகிய திருவருளை எனக்குத் தந்து என்பிறவி வேர் அறும்படிக்கு அருட்பார்வை பார்த்த ஆசாரியர்க்குக் கைம்மாறு அடிமையாடயிருத்தலன்றி வேறே கைம்மாறொன்றுமில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 98

இக்கணமே முத்தியினை எய்திடினும் யான்நினைந்த
அக்கணமே ஆனந்தந் தந்திடினும் – நற்கணத்தார்
நாயகற்கும் நாயகிக்கும் நந்திக்கும் யானடிமை
ஆயிருத்த லன்றியிலேன் யான்.

பொழிப்புரை :

நான் இப்பொழுதே மோட்சத்தைப் பெற்றாலும் நான் விரும்பினபொழுதே பேரானந்தத்தைத் தந்தாலும் நல்ல சிவயோகி களுக்கும் சிவனுக்கும் திருவருளுக்கும் நந்திதேவர்க்கும் நான் அடி மையாயிருத்தலன்றி வேறே கைம்மாறு ஒன்றுஞ் செய்ய மாட்டேன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 99

என்னை உடையவன்வந் தென்னுடனாய் என்னளவில்
என்னையுந்தன் னாளாகக் கொள்ளுதலால் – என்னை
அறியப்பெற் றேன்அறிந்த அன்பருக்கே ஆளாய்ச்
செறியப்பெற் றேன்குழுவிற் சென்று.

பொழிப்புரை :

அனாதியே என்னை அடிமையாக உடையவன் இப்போது மானிடனாய் வந்து எனக்கு நட்பாகி எனது போதம் நீங்கி யான் மாத் திரம் நின்றளவில் ஒரு பணியுஞ் செய்யாத என்னையும் தனக்கடிமையாகக் கொள்ளுகையால் என்னுடைய சுபாவத்தையறிந்தேன், சிவயோகிகள் கூட்டத்திற் சென்று அவர்களுக்கு ஆளாய் அவர்களுடனே கூடியிருக்கப் பெற்றேன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 100

சிந்தையிலும் என்றன் சிரத்தினிலும் சேரும்வண்ணம்
வந்தவனை மண்ணிடைநாம் வாராமல் – தந்தவனை
மாதினுடன் எத்திறமும் வாழ்ந்திருக்க என்பதலால்
ஏதுசொலி வாழ்த்துவே னியான்.

பொழிப்புரை :

எனது இதயத்திலும் தலையிலுந் தனது திருவடி (யை வைத்து) நாமினிப் பிறவாவண்ணம் தனது ஞானத்தைத் தந்தவனைத் திருவருளுடனே கூடி எக்காலமும் வாழ்ந்திருக்கக் கடவனென்று வாழ்த்துவதேயல்லாமல் வேறே எந்த வார்த்தை சொல்லி வாழ்த்தப் போகிறேன் யான்.
இது பிற்காலத் தான்றோர் வாக்கு:
ஆதார மாகி அருளொடு நிற்கின்ற
சூதான இன்பச் சுகவடிவை – ஓதாமல்
உள்ளவர்கள் கூடி யுணர்வொழிய நிற்பதலால்
தெள்ளவா ராதே சிவம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை
சிற்பி