ஆரூர்ப்பரவையுண்மண்டளி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பஞ்சின்மெல்லடியாள் உடனுறை மண்டலேசுரர்

மரம்: பாதிரி
குளம்: கமலாலயம், திருக்குளம்

பதிகம்: தூவாயா -7 -96 சுந்தரர்

முகவரி: திருவாரூர் அஞ்சல்,
திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம், 610001
தொபே. 04366 242343

இது துலா நாயனார்கோயில் என்று வழங்கப்படுகிறது. திருவாரூர்க் கீழவீதியில் இருக்கின்றது. ஓர்காலத்தில் மிக்கு எழுந்து வந்த கடலையுண்டு நிலைபெற்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது என்பர்.

துர்வாச முனிவர் வழிபட்ட தலம். இவர் பிரதிமம் தல விநாயகருக்கு அருகில் இருக்கிறது. இத்திருப்பெயர், இவ்வூர்ப்பதிகத்தில் `பஞ்சேரும் மெல்லடியாளை யோர்பாகமாய்` என எடுத்து ஆளப்பட்டுள்ளது.


கல்வெட்டு:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1904; No. 577-579.)

இத்திருக்கோயிலில் மூன்று கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் பெரும்பாலும் சிதைந்து விட்டன. இராசகேசரி வர்மனாகிய குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டு, இறைவரின் திருப்பெயரை `திருமண்டளியுடைய மகாதேவர்` என்று குறிப்பிடுகிறது. முதற்குலோத்துங்க சோழனுடைய 48-ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் உண்டு.

 
 
சிற்பி சிற்பி