பூவணம் (திருப்பூவணம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மின்னம்மை உடனுறை பூவணநாதர்


மரம்: பலா
குளம்: வைகை

பதிகங்கள்: அறையார்புனலு -1 -64 திருஞானசம்பந்தர்
மாதமர் -3 -20 திருஞானசம்பந்தர்
வடியேறு -6 -18 திருநாவுக்கரசர்
திருவுடை -7 -11 சுந்தரர்
திருவருள்புரிந்தாள் -9 -13 கருவூர்த்தேவர்

முகவரி: திருப்பூவணம் அஞ்சல்
இராமநாதபுரம் மாவட்டம், 623611
தொபே. 9443501761

பாண்டிநாட்டுத் தலம். மதுரைக்குக் கிழக்கே வைகையின் தென்கரையில் 18.கி.மீ. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. மதுரையிலிருந்து பேருந்துகள் உள்ளன.

இது பிரமன் பூசித்த தலம். `நான்மறையோன் கழலே சென்றுபேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடமாம்` என்பது சம்பந்தர் தேவாரம். பொன்னனையாள் என்னும் தாசிக்காகச் சொக்கலிங்கப் பெருமான் சித்தர்வடிவாக எழுந்தருளி ரசவாதம் செய்து சோமாஸ் கந்தர் திருவுருவத்தை அமைக்க அருள் செய்தனர் என்பது திருவிளை யாடற்புராணத்துட் காணப்படும் வரலாறு.

இத்தலம் தமிழ்நாட்டு மூவேந்தர்களும் ஒருங்கு கூடி வழி பட்ட தலமாக இருந்தது என்பதனை `முன்சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும் திருப்பூவணம்` என்னும் சம்பந்த சுவாமிகள் வாக்காலும், `உதியருடன் வன்றொண்டர் தாமிருந்த இடங்கெழுமி வளவனார் மீனவனார் வளம்பெருக மற்றவரோடும் அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிதிருந்தார்` என்னும் சேக்கிழார் திருவாக்காலும் அறியலாம்.

இறைவன் பூவணநாதர். இறைவி மின்னம்மை. மின்னனையா ளம்மை என்று வழங்குவதுமுண்டு. விருட்சம் பலா. தீர்த்தம் வைகை.



கல்வெட்டு:

கோநேரின்மைகொண்டான் தனது எட்டாம் ஆட்சியாண்டில் புஷ்பவனேசுவரர் கோயிலுக்கு நிலம் வழங்கினான். குலசேகரதேவன் தனது 25 ஆம் ஆட்சியாண்டில் தினந்தோறும் வேத பாராயணஞ் செய்ய 1008 பிராமணர்களுக்கு உணவிற்காக நிலம் அளித்தான். ஒரு செப்பேடு ராஜகெம்பீர சதுர்வேதி மங்கல சபைக்கு 25 காசுகள் வழங்கியதை அறிவிக்கிறது.

 
 
சிற்பி சிற்பி