புகலூர் (திருப்புகலூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர்


மரம்: புன்னை
குளம்: அக்கினி தீர்த்தம்

பதிகம்:
குறிகலந்த -1 -2 திருஞானசம்பந்தர்
வெங்கள்விம்மு -2 -115 திருஞானசம்பந்தர்
செய்யர் வெண் -4 -16 திருநாவுக்கரசர்
பகைத்திட்டார் -4 -54 திருநாவுக்கரசர்
தன்னைச் சர -4 -105 திருநாவுக்கரசர்
துன்னக் கோவண -5 -46 திருநாவுக்கரசர்
எண்ணுகேன் என் -6 -99 திருநாவுக்கரசர்
தம்மை யேபுகழ்ந் -7 -34 சுந்தரர்

முகவரி:
திருப்புகலூர் அஞ்சல்
திருகண்ணபுரம் வழி
நாகப்பட்டினம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609704
தொபே. 04366 292300

தலம்: சோழவள நாட்டில் காவிரித்தென்கரையில் அமைந்துள்ள 75 ஆவது தலம். நாகை மாவட்டத்தில் நன்னிலம் கோட்டத்தைச் சேர்ந்தது. நன்னிலம், சன்னாநல்லூர், நாகையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மயிலாடுதுறை - திருவாரூர் புகைவண்டி இருப்புப் பாதை யில் நன்னிலம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

புன்னாகவனம், சரண்யபுரம், ரத்தனாரண்யம் என்பன புராணங்களில் வழங்கும் மறுபெயர்கள். இத்தலத்தின் திருக்கோயில் நாற்புறமும் அகழிசூழ நடுவில் இருக்கிறது. அக்னி பகவான் பூசித்துப் பேறுபெற்ற தலம். திருநாவுக்கரசர் முத்தி பெற்ற தலம். முருக நாய னாருடைய அவதார ஸ்தலம். சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் செங் கல்லைப் பொன்னாக்கிய திருத்தலம். மேகங்கள் பூசித்த தலம்.

பெயர்கள்:

இறைவன் பெயர் அக்னிபுரீஸ்வரர்; இறைவி கருந்தாள் குழலியம்மை. இறைவன் திருநாமம் தேவாரங்களில் `கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே` `கருந்தாள் குழலியும் தாமும் கலந்து` என்பன அம்மையப்பர், திருநாமங்களை அறிவிக்கும் அகச்சான்றுகள்.

தீர்த்தம்:

அக்னிதீர்த்தம். இதற்குப் பாணதீர்த்தம் என்றும் ஒரு பெயருண்டு. முடிகொண்டான்ஆறு, கோயிலுக்குத் தென்பக்கத்தில் ஓடு கிறது.

தல விருட்சம்:

புன்னை. `புன்னைப் பொழிற்புகலூர்`, `புன்நாகம் மணங் கமழும் பூம்புகலூர்` என்ற திருமுறைகள் இதற்கு மேற்கோள்.

விழா:

சித்திரைச் சதயத்தைப் பத்தாம் நாளாகக்கொண்டு விழா நடைபெறுகிறது. பத்துநாளிலும் அப்பர் சுவாமிகள் வரலாற்றை ஒட்டிய ஐதீகமே நினைவூட்டப்பெறுகின்றது. வைகாசி மாதம் பருவ இறுதியாகப் பிரமோற்சவம் நடைபெறுகிறது. சந்திரசேகரர் விசேஷ மான மூர்த்தி.

வேளாக்குறிச்சி ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது. வர்த்த மானீச்சரம் இக்கோயிலுக்குள் உள்ளது.




கல்வெட்டு:

அரசாங்கத்தினர் படி எடுத்த கல்வெட்டுக்கள் 67. அவை இராஜராஜன் I (கி.பி.985-1014) காலத்திலிருந்து காணப்படுகின்றன. இரண்டாம் பிராகாரம் இராஜ ராஜன் I இராஜ இராஜேந்திரன் I இவர்கள் காலத்திற்குப் பிந்தியதாகும். இக்கோயில் அர்த்தமண்ட பத்தைக் கட்டியவன் இறையூர் உடையான் அரையன் கங்கைகொண் டானான சோழ விச்சாதரப் பல்லவரையன். முதல் பிராகாரத்துத் தென்னந் திருவாயிலுக்கு ராஜராஜன் திருவாசல் என்று பெயர்.

கர்ப்பக் கிருகத்தைச் சுற்றியுள்ள நீராழிப்பத்தி மண்டபத்தைத் திருப்பணி செய்தவன் ஆர்க்காடு கிழான் சேதுராயன் என்பவன். இத் தலத்து `நரலோக வீரன் திருமண்டபம்` என்ற ஒன்று இருந்ததாக ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. சிதம்பரம் கோயில் கல்வெட்டில் நரலோகன் என்று கூறப்பட்டவன் கோப்பெருஞ்சிங்கன். அக்காலத்து நூற்றுக்கால் மண்டபம் அவனால் கட்டப்பெற்றது.

அதுபோல இத்தலத்தும் நூற்றுக் கால் மண்டபத்தை அவன் கட்டியிருக்கக்கூடும். திருமதில் திருப்பணி வேளாக்குறிச்சி மகாதேவ பண்டாரத்தின் சிஷ்யரான அருணாசலத் தம்பிரானால் செய்யப் பெற்றது. மூன்றாங்குலோத்துங்கன் காலத்திலும் இக்கோயில் அகழால் சூழப்பட்டிருந்தமை அறியலாம்.

இவ்வூர், முதல் இராஜராஜன் காலத்தில் க்ஷத்திரியசிகாமணி வளநாடு என்றும், மும்முடிச்சோழ வளநாடு என்றும் முதற்குலோத் துங்கன் காலத்திலும் அதற்குப்பின்பும், குலோத்துங்க சோழவள நாட்டைச் சார்ந்ததெனவும் கூறப்பெறுகிறது. இது பனையூர்நாட்டுப் பிரமதேயமான திருப்புகலூர் என வழங்கப்பெறுகிறது. இறைவன் கோணப்பெருமான் என்று குறிப்பிடப்பெறுகிறார். இங்குள்ள அம்பிகை நம்பிராட்டியார் என வழங்கப்பெறுகிறார்.

இராஜராஜன் காலத்தில் அம்மைக்கு நிவந்தங்கள் அளிக்கப் பெற்றன. திருநாவுக்கரசு நாயனார் குளிச்செழுந்த நாயனார் எனக் குறிக்கப்பெறுகிறார். இவருக்கு இராஜராஜன் காலத்தில் நித்திய பூசைக்கு ஏற்பாடு செய்யப்பெற் றிருக்கிறது. முருகநாயனார் திருமடம் நம்பிநாயனார் திருமடம் என்றும், திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தருமபுரத்து நாயனார், யாழ்மூரி நாயனார் என்றும், திருநீலநக்க நாயனாரை நக்கநாயனார் என்றும் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

 
 
சிற்பி சிற்பி