நின்றியூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு உலகநாயகி உடனுறை இலட்சுமிபுரீசுவரர்


மரம்: விளா மரம்
குளம்: இலட்சுமி தீர்த்தம்

பதிகங்கள்: சூலம்படை -1 -18 திருஞானசம்பந்தர்
கொடுங்கண் -5 -23 திருநாவுக்கரசர்
அற்றவனார் -7 -19 சுந்தரர்

முகவரி: திருநின்றியூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609118
தொபே. 04364 320520

சோழநாட்டு காவிரி வடகரைத்தலம். நாகைமாவட்டம் மயிலாடு துறை, வைத்தீஸ்வரன்கோயில் பேருந்துவழியில் உள்ளது.

திருமகள் வழிபட்டு நிலைபேறு எய்திய தலம். சோழன் ஒருவன் திருவிளக்கிட்டுத் தினந்தோறும் வழிபட்டுவந்தான். அவன் கொண்டுவந்த திரி ஒருநாள் நின்றுவிடவே, சிவலிங்கத்தினின்றும் ஒரு சோதி தோன்றி, அவன் வழிபாட்டிற்கு இடையூறுண்டாகாமல் உதவி யது. அதனால் திரிநின்றவூர் ஆயிற்று. அது இப்போது திரு நின்றவூர் என வழங்குகின்றது என்பது செவிவழிச்செய்தி.

பரசுராமன் நின்றி யூரை இறைவற்கும், பக்கத்திலுள்ள 360 வேலி நிலத்தை வேதியர்கட்கும் அளித்து வழிபட்டான் என்பது புராண வரலாறு. இதனையே சுந்தரர் தேவாரம் தக்கேசி மூன்றாம்பாடல் குறிப்பிடுகிறது. அடுத்த பாடலில், பசு பால்சொரிந்து அபிஷேகித்து வந்ததாகவும் ஒரு வரலாறு குறிக்கப் பெற்றுள்ளது.

சுவாமிபெயர் லக்ஷ்மிபுரீசுவரர்; மகாலட்சுமிநாதர். அம்மை பெயர் உலகநாயகி. தீர்த்தம் நீலதீர்த்தம். (இது அபிதான சிந்தாமணி கூற்று) மகாலக்ஷ்மி தீர்த்தம் எனவும் வழங்கும்.




கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றிய கல்வெட்டு ஒன்றே உள்ளது. 1921ம் ஆண்டில் படியெடுக்கப்பெற்றுள்ளது. திரிபுவன சக்ரவர்த்தி இராஜ ராஜதேவர்க்கு ஆண்டு 15வது கும்பரவி அட்டமி ஞாயிறு மூல நக்ஷத்திரம் என்று தொடங்குகிறது (-538 of 1921. மீனரவி என்றும் பாடம் உண்டு.). தருமை ஆதீனக் கோயில்களில் ஒன்று.

 
 
சிற்பி சிற்பி