கொண்டீச்சரம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சாந்தநாயகி உடனுறை பசுபதி நாதர்


மரம்: வில்வம்
குளம்: புட்கரிணி தீர்த்தம்

பதிகங்கள்: வரைகிலேன் -4 -67 திருநாவுக்கரசர்
கண்டபேச் -5 -70 திருநாவுக்கரசர்

முகவரி: தூத்துக்குடி அஞ்சல்
சன்னாநல்லூர்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 609504
தொபே. 04366 314871

இத் தலம் நாகை மாவட்டம் நன்னிலம் புகைவண்டி நிலையத்திற்கு மேற்கே 2. கி.மீ. தொலைவில் உள்ளது. இது வில்வா ரணியம் எனவும் வழங்கப்பெறும்.

தலச்சிறப்பு: இது காமதேனு பூசித்து வழிபட்ட தலமாகும். உமையம்மையார் பசு உருவாய் இறைவனைத் தேடிக்கொண்டுவந்து கொம்பினால் பூமியைக் கிளறிக்கொண்டு வருகையில் இறைவன் தலையில் கொம்பு பட்டு இரத்தம் வரத் தன் பாலையே இட்டுக் காயத்தை ஆற்றியபின் வழிபட்டதாக வரலாறு. இலிங்கத் திருவுருவின் தலையில் இன்றும் கோட்டின் வடு காணப்பெறும். இத் தலத்திற்குத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருப்பதிகங்கள் இரண்டு உள்ளன.

இறைவர்: பசுபதி நாதர். இறைவி: சாந்தநாயகி. தீர்த்தங்கள்: க்ஷீரபுஷ்கரிணி தீர்த்தம். இத் தீர்த்தம் கோயிலைச் சுற்றி அகழிபோல் அமைந்துள்ளது.



கல்வெட்டு:

இக் கோயிலில் சகம் 1439 இல் ஏற்பட்ட விசயநகர வேந்தராகிய வீரகிருஷ்ணதேவ மகாராயர் கல்வெட்டு ஒன்று இருக்கின்றது. அது கிருஷ்ணதேவராயர் உதயகிரிகோட்டையைக் கைப்பற்றியதையும் அக் கோட்டையில் இருந்த திருமலைராகுத்தராயரைச் சிறைப் பிடித்ததையும் குறிக்கின்றது.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1911, No. 80.)

 
 
சிற்பி சிற்பி