மதுரையில் , பாண்டியன் , மங்கையர்க்கரசியாரை நோக்கி , ` நீ வருந்தாதே ` என்று சொல்லி அழைத்து சமணரை நோக்கி ` என் வெப்பு நோயை ஒழிக்குந்திறத்தில் நீவிரும் இச்சிவனடி யாரும் முடிவாகத் தேறிய தெய்வத் தன்மையைத் தெரிப்பீர் ` என்றான் . அப்போது , மங்கையர்க்கரசியார் அஞ்சினார் . அதை உணர்ந்த திருஞானசம்பந்தர் , அந்நற்றவத் திருவை நோக்கி ` மானினேர் விழிமாதராய் , எனைப்பாலன் என்றுநீ நனி அஞ்ச வேண்டா . நிலையிலா அமணர்க்கு என்றும் யான் எளியேன் அலேன் ` என்று பாடியது இத்திருப்பதிகம் .