Get Flash to see this player.
செல்வத் தியாகேசர் சேவடி தொழவேண்டும் என்ற அன்புவெள்ளம் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் உள்ளத்துப் பெருகி வழிகின்றது. அப்பர் பெருமானும் ஆரூர்த் தியாகேசப் பெருமானின் ஆதிரை நாளின் திருவோலக்கச் சிறப்பை எடுத்து விளக்கினார்கள். அதனால் அன்பு வெள்ளம் உடைப்பெடுத்து ஓடுகின்றது. ஆரூர்க்கு வழிக்கொண்டு வருகின்றார்கள். கனிந்த சிந்தை கவிதைகளாக வெளிப்படுகின்றது. `பாடலனான்மறை` என்ற பதிகமாகின்றது. விற்குடி முதலியவற்றை வணங்கிக் கொண்டு திருவாரூர் திருமதிற் புறத்து அணுகுகின்றபோது சிவிகையினின்றும் இறங்கித் தலத்தையும் சிவமாகக்கண்டு, செங்கை நிறைய மலர்களையேந்தித் தூவுகின்றவர்கள் திருவிருக்குக்குறளாகிய இதனைத் தமிழ்நாடுய்ய அருளிச் செய்கின்றார்கள்.
Get the Flash Player to see this player.